ETV Bharat / state

இந்தி படித்தால் தான் அரசு வேலையா? - கனிமொழி பாய்ச்சல்

author img

By

Published : Oct 2, 2019, 6:35 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் இந்தி படித்தால் தான் அரசு வேலை என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி வருவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

kanimozhi mp

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்த திமுக எம்.பி கனிமொழி நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள காந்தி சிலை, அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து களக்காடு நாங்குநேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தேர்தல் பரப்புரையில் கனிமொழி

அப்போது பேசிய அவர், ‘நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக படையெடுத்து வரும் அமைச்சர்கள், மக்களின் பிரச்னைகளை தீர்க்க ஒரு அமைச்சரும் வந்தது கிடையாது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருகிறது. தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்று மக்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர்’ என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், ‘மக்களுக்கு பாதுகாப்பிலாத நிலையில் உள்ள ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்தி தெரிந்தால் தான் அரசு வேலை என்ற நிலையை தமிழ்நாட்டில் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்த்து கேள்வி கேட்க தயாராக இல்லை. மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு மத்திய அரசை எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுகவும் காங்கிரஸ் கட்சியும்தான்’ என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்த நிலை மாறி இன்று நீட் என்றால் ஆள்மாறாட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் என்றால் மோசடி என உருவாகிவிட்டது என்றார்.

இதையும் படிங்க: ‘பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்’ - கனிமொழி

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்த திமுக எம்.பி கனிமொழி நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள காந்தி சிலை, அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து களக்காடு நாங்குநேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தேர்தல் பரப்புரையில் கனிமொழி

அப்போது பேசிய அவர், ‘நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக படையெடுத்து வரும் அமைச்சர்கள், மக்களின் பிரச்னைகளை தீர்க்க ஒரு அமைச்சரும் வந்தது கிடையாது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருகிறது. தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்று மக்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர்’ என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், ‘மக்களுக்கு பாதுகாப்பிலாத நிலையில் உள்ள ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்தி தெரிந்தால் தான் அரசு வேலை என்ற நிலையை தமிழ்நாட்டில் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்த்து கேள்வி கேட்க தயாராக இல்லை. மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு மத்திய அரசை எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுகவும் காங்கிரஸ் கட்சியும்தான்’ என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்த நிலை மாறி இன்று நீட் என்றால் ஆள்மாறாட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் என்றால் மோசடி என உருவாகிவிட்டது என்றார்.

இதையும் படிங்க: ‘பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்’ - கனிமொழி

Intro:மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாத அமைச்சர்கள் இடைத்தேர்தலின் போது மட்டும் மக்களோடு மக்களாக இருப்பதைப்போல காட்டி வருவதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் காரியாலயம் திறந்து வைத்த திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.Body:மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாத அமைச்சர்கள் இடைத்தேர்தலின் போது மட்டும் மக்களோடு மக்களாக இருப்பதைப்போல காட்டி வருவதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் காரியாலயம் திறந்து வைத்த திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை வந்த திமுக எம்பி கனிமொழி நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள காந்தி சிலை, அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து களக்காடு நாங்குநேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த அவர் நிகழ்வில் பேசுகையில் நடைபெறும் இடைதேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இடைதேர்தலில் எதிர்கட்சிக்காக பல அமைச்சர்கள் பணி செய்ய வந்துள்ளனர். இடைதேரதலுக்காக பல அமைச்சர்கள் இங்கு வருகின்றனர். மக்களுக்கான பல பிரச்சனைகளுக்கு தீர்வான காண ஒரு அமைச்சரும் வந்தது கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருகிறது. தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்று மக்களை கொச்சை படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வரவில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் முதலீடுகள் தமிழகம் தேடி வந்தது. இப்போது உள்ள ஆட்சியாளர் பல வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் ஒரு நபருக்காவது வேலை வழங்கியதாக இல்லை எனவும் அதிமுக ஆட்சியில் ஒரு தொழில் வளர்ச்சியும் இல்லை. அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மக்களுக்கு பாதுகாப்பிலாத நிலையில் உள்ள ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்தி தெரிந்தால் தான் அரசு வேலை என்ற நிலை தமிழகத்தில் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்த்து கேள்வி கேட்க தயாராக இல்லாத நிலை இருந்து வருகிறது. மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மத்திய அரசை எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான் என பேசிய அவர். நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்த நிலை மாறி நீட் என்றால் ஆள்மாறாட்டம் என்ற நிலையாக உருவாகியுள்ளதாகவும் நீட் என்றால் மோசடி என உருவாகிவிட்டது. இப்படி தேர்வெழுதி மருத்துவம் பார்த்தால் எந்த நிலைவரும் என நினைத்து பார்க்கவேண்டும் எனவும் தமிழகம் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை மெளனமாக இருக்கும் என நினைக்க கூடாது என்பதை நிருபித்தது நாடாளுமன்ற தேர்தல். அதே போல இடைதேர்தலிலும் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என தெரிவித்தார்


இந்த நிகழ்ச்சியில் கிழக்கமாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் அப்துல்வகாப், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம் , வசந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் டிபிஎம் மைதீன்கான் , ஏ எல் எஸ் லட்சுமணன் , களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி ராஜான் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.