ETV Bharat / state

மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த கண்டெய்னர் பறிமுதல்...!

author img

By

Published : Apr 9, 2019, 8:03 AM IST

திருநெல்வெலி: மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கண்டெய்னர் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் உள்ள குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து கன்டெய்னர்களைச் சோதனையிட்டனர். அப்போது அந்த கண்டெய்னரில் மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் அதிகளவில் இருந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் கைப்பற்றப்பட்டு மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் உள்ள குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து கன்டெய்னர்களைச் சோதனையிட்டனர். அப்போது அந்த கண்டெய்னரில் மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் அதிகளவில் இருந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் கைப்பற்றப்பட்டு மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:மருத்துவக் கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகளை ஏற்றி வந்த ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து கண்டெய்னர்கள் பிடிபட்டது !!! காவல்துறையினர் தீவிர விசாரணை !


Body:நெல்லை மாவட்டம் செங்கோட்டை பார்டர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலையோரம் உள்ள குடோனில் கன்டெய்னர்கள் நிற்பதை பார்த்து அதை சோதனையிட்டனர் அப்பொழுது ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து கண்டெய்னர்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அளவில் இருந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது என்பது தீவிர விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர் .லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.