தேனி மாவட்டம் கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒண்டிவீரன் - மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ரவிக்குமார் (25), நித்யா (20), மாரிமுத்து (17) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனான ரவிக்குமார் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் கோழிப் பண்ணை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. எனவே சிகிச்சைக்காக ரவிக்குமார் சொந்த ஊர் வந்தார். நேற்றிரவு (ஜன.10) இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது வீட்டின் அருகே முகம் சிதைந்த நிலையில், கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.