ETV Bharat / state

வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம்: காலணிகளை கையில் ஏந்தி சாலை மறியல்! - வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம்

தேனி: சமூக வலைதளங்களில் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக துடைப்பங்கள், காலணிகள் ஆகியவற்றைக் கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெண்கள் சாலை மறியல்.

whatsapp audio issue
author img

By

Published : Apr 25, 2019, 9:26 AM IST

சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பிரிவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பெண்களை அவதூறாகப் பேசியவர்களுக்கு எதிராகத் துடைப்பங்களையும், காலில் அணிந்திருந்த காலணிகளைக் காட்டியும், தரையில் அடித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சாலை மறியலால் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்படைந்தது. போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதைவிட பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பிரிவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பெண்களை அவதூறாகப் பேசியவர்களுக்கு எதிராகத் துடைப்பங்களையும், காலில் அணிந்திருந்த காலணிகளைக் காட்டியும், தரையில் அடித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சாலை மறியலால் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்படைந்தது. போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதைவிட பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Intro:Body:

சுப.பழனிக்குமார் - தேனி.           24.04.2019.



சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம். பொங்கியெழுந்த தேனி மாவட்ட பெண்கள். துடைப்பம், காலணிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல்.



கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சமுதாயம் சார்பில் பெண்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்டோர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.



மேலும் தங்கள் சமுதாயப் பெண்களை அவதூறாக பேசியவர்களுக்கு எதிராக துடைப்பம் மற்றும் காலில் அணிந்திருந்த காலணிகளை காட்டியும், தரையில் அடித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சாலை மறியலால் மதுரை – தேனி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்த சாலை மறியலால் பரபரப்படைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கிய பின்னர்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.



இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், 'கடந்த வாரம் தங்கள் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆடியோ பரப்பி வருபவர்களை கைது செய்யக்கோரி புகார் அளித்து ஒரு வார காலம் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கைது செய்யாவிட்டால் இதனைவிட மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்' என எச்சரித்தனர்.



பேட்டி : லட்சுமி – உப்புத்துறை.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.