ETV Bharat / state

'திமுக-அதிமுகவுக்கு ஓட்டுபோட்டா கையில் குஷ்டம் வரும்' சீமான் பேச்சு!

author img

By

Published : Apr 4, 2019, 9:57 AM IST

தேனி: அதிமுக-திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் கூட்டணிகளுக்கு மக்கள் வாக்களித்தால் அவர்களுக்கு குஷ்டம்தான் வரும் என சீமான் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

தேனியில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாகுல் அமீது, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அருணாதேவி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சோபனா ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பொருளாதாரத்தில் உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல படிநிலைகள் உள்ளன. அதில் பாஜக அரசு அடாவடி பொருளாதாரத்தை அமல்படுத்தியுள்ளது. உண்மை, நேர்மை, துணிவு இருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியாவது களத்திற்கு வர வரமுடியுமா? மேலும் தாமரை, உதயசூரியன், கை உள்ளிட்ட அதிமுக-திமுக திராவிட கூட்டணிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு குஷ்டம்தான் வரும் என்று பேசினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாகுல் அமீது, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அருணாதேவி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சோபனா ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பொருளாதாரத்தில் உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல படிநிலைகள் உள்ளன. அதில் பாஜக அரசு அடாவடி பொருளாதாரத்தை அமல்படுத்தியுள்ளது. உண்மை, நேர்மை, துணிவு இருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியாவது களத்திற்கு வர வரமுடியுமா? மேலும் தாமரை, உதயசூரியன், கை உள்ளிட்ட அதிமுக-திமுக திராவிட கூட்டணிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு குஷ்டம்தான் வரும் என்று பேசினார்.

Intro: பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரின் மகனுக்கு "ராவணன்" என பெயர் சூட்டிய சீமான்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு சீமான் பெயர் சூட்டினார்.


Body: நாம் தமிழர் கட்சி சார்பில் தேனியில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாகுல் அமீது, மற்றும் ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அருணாதேவி, பெரியகுளம் (தனி) சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் சோபனா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், பொருளாதாரத்தில் பல படிநிலைகள் உள்ளன உற்பத்தி, சேவை உள்ளிட்ட பொருளாதாரங்கள் உள்ளன.அதில் பாஜக அரசு அடாவடி பொருளாதாரத்தை அமல்படுத்தியுள்ளது. உண்மை, நேர்மை, துணிவு இருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியாவது களத்திற்கு வர வரமுடியுமா. தாமரை, உதயசூரியன் ,கை உள்ளிட்ட சின்னங்களுக்கு கஷ்டமில்லாமல் நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு குஷ்டம் தான் வரும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலினின் கூட்டத்திற்கு காசு கொடுத்து தான் மக்கள் அழைத்து வரப்பட்டனர். ஒரு கோடி, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் எனக்கூறுபவர்கள் எதற்காக ஓட்டுக்கு பணம் வழங்க வேண்டும் என்றார்.
மேலும் மம்தா, மாயாவதி, அகிலேஷ், பவன் கலாயான் போன்றோர் பிரதமராக வர வேண்டும். ஜந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிரதமர்களாக சுழற்சி முறையில் ஆட்சி நடத்த வேண்டும் என்றார்.



Conclusion: கூட்டம் நிறைவில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் பெண் பிள்ளைகளுக்கு அமுதினி, மாயவள் என்று சீமான் பெயர் சூட்டினார். மேலும் பெரியகுளம் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் சோபனாவின் 1வயது மகனுக்கு ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டதால், ராவணன் என்று பெயர் வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.