ETV Bharat / state

ஒன்றிய கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக திமுகவினர் புகார்

author img

By

Published : Jan 8, 2020, 10:13 AM IST

தேனி: சின்னமனூர் ஒன்றியத்தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக பணம் கொடுத்து திமுக ஒன்றிய கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக காவல் துறையினரிடம் திமுகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dmk party protest
dmk party protest

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் 1ஆவது வார்டு பொட்டிப்புரம் பகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி சிவக்குமார். இவர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். இதன் பின்னர், ஜெயந்தி சிவக்குமார் திமுகவினருடன் செல்லாமல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வந்ததையடுத்து ஜெயந்தியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி காவல் துறையின் பாதுகாப்போடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாகவும், விரைவில் அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கோரி நேற்று திமுகவினர் டி.திம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தும் ஒன்றிய கவுன்சிலர் காணாமல் போனதாகக் கூறி போடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தனர்.

சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக ஆறு வார்டுகளையும், அதிமுக நான்கு வார்டுகளையும் கைபற்றியிருந்தது. தற்போது திமுக கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமார் அதிமுக பக்கம் சென்றதால் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

இதனால் சின்னமனூர் ஒன்றியத்தை எந்தக் கட்சி கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின் போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் உள்ளூர் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் 1ஆவது வார்டு பொட்டிப்புரம் பகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி சிவக்குமார். இவர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். இதன் பின்னர், ஜெயந்தி சிவக்குமார் திமுகவினருடன் செல்லாமல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வந்ததையடுத்து ஜெயந்தியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி காவல் துறையின் பாதுகாப்போடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாகவும், விரைவில் அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கோரி நேற்று திமுகவினர் டி.திம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தும் ஒன்றிய கவுன்சிலர் காணாமல் போனதாகக் கூறி போடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தனர்.

சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக ஆறு வார்டுகளையும், அதிமுக நான்கு வார்டுகளையும் கைபற்றியிருந்தது. தற்போது திமுக கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமார் அதிமுக பக்கம் சென்றதால் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

இதனால் சின்னமனூர் ஒன்றியத்தை எந்தக் கட்சி கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின் போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் உள்ளூர் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்

Intro: சின்னமனூர் ஒன்றியத்தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக பண ஆசை காட்டி திமுக ஒன்றிய கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக காவல்துறையினரிம் புகார் தெரிவித்த திமுகவினர்.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் 1 வது வார்;டு பொட்டிப்புரம் பகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி சிவக்குமார். சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்ற பின்பு திமுகவினருடன் செல்லாமல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து பதவியேற்று வந்த ஜெயந்தியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் திமுக ஒன்றிய கவுன்சிலரை வாகனத்தில் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியை காணவில்லை என்றும், அவரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாகவும், விரைவில் அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கோரி இன்று திமுகவினர், டி.திம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து காணாமல் போன ஒன்றிய கவுன்சிலரை கண்டுபிடித்துத் ;தரக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னர் ஜெயந்தி சிவக்குமாரை மீட்டுத்தரக் கோரி போடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தனர்.
சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றிய கவுன்சிலர் பதவியில், திமுக 6வார்டுகளையும், அதிமுக 4வார்டுகளையும், கைபற்றியிருந்தது, தற்போது திமுக கவுன்சிலர் ஜெயந்திசிவக்குமார் அதிமுக பக்கம் சென்றதால் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளது. இதனால் சின்னமனூர் ஒன்றியத்தை எந்த கட்சி கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Conclusion: மேலும் ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின் போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளதால் உள்ளுர் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.