ETV Bharat / state

குரங்கணி - டாப் ஸ்டேஷன் இடையே சாலை அமைகக்கும் பணிகள் தொடக்கம் - சென்னை மாவட்ட செய்திகள்

தேனி: குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை 13 கி.மீ தூரம் சாலை அமைக்க முதற்கட்ட ஆய்வு தொடங்கியது.

சாலை பணிகள் தொடக்கம்
சாலை பணிகள் தொடக்கம்
author img

By

Published : Feb 5, 2021, 4:01 PM IST

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டது கொட்டக்குடி ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர்கள்.

இப்பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லை. போடியில் இருந்து குரங்கனி வரை மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரையுள்ள 13 கி.மீ அடந்த வனப்பகுதியாகும். எனவே சாலை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பொதுமக்கள் தினமும் அவ்வழியாக நடந்தே சென்று வருகின்றனர்.

சாலை பணிகள் தொடக்கம்

சரியான சாலை வசதி இல்லாததால், இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து மூணார் வழியாக டாப் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இதனால் 102 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தது வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி 2019 நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்த பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். தற்போது குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை 13 கி.மீ தூரம் சாலை அமைக்க முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை அரசிடம் அலுவலர்கள் வழங்கயுள்ளனர். அதன்பின் அரசின் உத்தரவின்படி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிகிறது.

இதையும் படிங்க: திருநாங்கூரில் சேவார்த்திகள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டது கொட்டக்குடி ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர்கள்.

இப்பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லை. போடியில் இருந்து குரங்கனி வரை மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரையுள்ள 13 கி.மீ அடந்த வனப்பகுதியாகும். எனவே சாலை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பொதுமக்கள் தினமும் அவ்வழியாக நடந்தே சென்று வருகின்றனர்.

சாலை பணிகள் தொடக்கம்

சரியான சாலை வசதி இல்லாததால், இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து மூணார் வழியாக டாப் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இதனால் 102 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தது வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி 2019 நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்த பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். தற்போது குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை 13 கி.மீ தூரம் சாலை அமைக்க முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை அரசிடம் அலுவலர்கள் வழங்கயுள்ளனர். அதன்பின் அரசின் உத்தரவின்படி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிகிறது.

இதையும் படிங்க: திருநாங்கூரில் சேவார்த்திகள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.