ETV Bharat / state

'விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யத் தயார்' - ஓ.பி. ரவீந்திரநாத் குமார் எம்.பி

author img

By

Published : Jan 13, 2020, 9:13 AM IST

தேனி: திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உதவிகளை தாம் செய்து தரத் தயார் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

sports-players-who-need-any-aid-contact-me-says-mp-op-raveendranath
'விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்ய தயார்' - ஓ.பி. ரவிந்திரநாத்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தேனி நேரு சிலையில் இருந்து 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14 கி.மீ தூரமும், லட்சுமிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து பள்ளி வரையில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கி.மீ., தூரமும் மாரத்தான் நடைபெற்றது.

இதில் 14 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சிவகாசியைச் சேர்ந்த குணாளன், வேல்முருகன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் நீலாம்பரி, சந்தியா ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேனியைச் சேர்ந்த பிரீத்தி, ஷாருக் ஆகிய இருவர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கைலாசபட்டி அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், தடகள வீராங்கனை தங்க மங்கை கோமதி மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரமும், 5 ஆயிரத்திற்கான காசோலையையும் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், 'தடகள விளையாட்டு உள்பட அனைத்து விதமான விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தாம் தயார். உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் பெரியகுளத்தில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை அணுகலாம்' என்றார்.

'விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யத் தயார்' - ஓ.பி. ரவீந்திரநாத் குமார்

இந்தப் போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்க: அதிமுக புறக்கணிப்பு - தேனியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தேனி நேரு சிலையில் இருந்து 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14 கி.மீ தூரமும், லட்சுமிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து பள்ளி வரையில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கி.மீ., தூரமும் மாரத்தான் நடைபெற்றது.

இதில் 14 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சிவகாசியைச் சேர்ந்த குணாளன், வேல்முருகன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் நீலாம்பரி, சந்தியா ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேனியைச் சேர்ந்த பிரீத்தி, ஷாருக் ஆகிய இருவர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கைலாசபட்டி அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், தடகள வீராங்கனை தங்க மங்கை கோமதி மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரமும், 5 ஆயிரத்திற்கான காசோலையையும் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், 'தடகள விளையாட்டு உள்பட அனைத்து விதமான விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தாம் தயார். உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் பெரியகுளத்தில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை அணுகலாம்' என்றார்.

'விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யத் தயார்' - ஓ.பி. ரவீந்திரநாத் குமார்

இந்தப் போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்க: அதிமுக புறக்கணிப்பு - தேனியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

Intro:         திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தரத் தயார்.! தேனி எம்;.பி ஓ.பி.ரவிந்திரநாத்குமார்.
பெரியகுளத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பரிசளிப்பு விழாவில் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தேனி நேரு சிலையில் இருந்து 14கி.மீ தூரத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கும், லட்சுமிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து 5கி.மீ தூரம் ரோஸி வித்யாலயா பள்ளி வரையில் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்குமாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் 14 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சிவகாசியை சேர்ந்த குணாளன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை ஷபிடித்தனர். அதே போன்று பெண்களுக்கான பிரிவில் நீலாம்பரி மற்றும் சந்தியா ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேனியைச் சேர்ந்த பிரீத்தி, ஷாருக் ஆகிய இருவர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ரோஸி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தங்க மங்கை கோமதி மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.10,000 மற்றும் 5ஆயிரத்திற்கான காசோலைகளை ஓ.பி.ரவீந்திரநாத்குமார் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், தடகள விளையாட்டு உள்பட அனைத்து விதமான விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
Conclusion: இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.