ETV Bharat / state

பாதை வசதி மறுக்கப்பட்ட விவகாரம் - பட்டியிலின மக்கள் தேசியக் கொடியுடன் அரை நிர்வாண போராட்டம்! - theni district news

தேனி : பாதை வசதி கேட்டு தேசியக்கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அரை நிர்வாணப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் .

half nude rally with national flag in theni
author img

By

Published : Sep 19, 2019, 10:26 PM IST

தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பட்டியலின மக்களுக்காக அரசு இந்திரா நகர் குடியிருப்பை உருவாக்கியது.

இந்த மக்கள் சில நாட்களாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டுமென 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று, கடந்த 14ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதையைச் சுற்றி சுவர் எழுப்பியதால் நடைபாதை தடைபட்டது.

இதையடுத்து, அந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்பைக் காலி செய்து ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.

தேனியில் தேசியக் கொடியுடன் அரை நிர்வாண போராட்டம்

அரசு தரப்பிலிருந்து மூன்று நாட்களாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், நான்காம் நாளான இன்று கையில் தேசியக் கொடியை ஏந்தி அரை நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேரணியைக் கைவிட்டு தற்காலிக குடியிருப்பிற்கு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து தேனி வட்டாட்சியர் தற்காலிக குடியிருப்பு அமைந்திருந்த பகுதிக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், பல கட்டப் போராட்டம் நடத்தி தங்களது குடியுரிமைகளை ஒப்படைத்துவிட்டு மலைப்பகுதிக்கு குடிபெயர்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பட்டியலின மக்களுக்காக அரசு இந்திரா நகர் குடியிருப்பை உருவாக்கியது.

இந்த மக்கள் சில நாட்களாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டுமென 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று, கடந்த 14ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதையைச் சுற்றி சுவர் எழுப்பியதால் நடைபாதை தடைபட்டது.

இதையடுத்து, அந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்பைக் காலி செய்து ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.

தேனியில் தேசியக் கொடியுடன் அரை நிர்வாண போராட்டம்

அரசு தரப்பிலிருந்து மூன்று நாட்களாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், நான்காம் நாளான இன்று கையில் தேசியக் கொடியை ஏந்தி அரை நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேரணியைக் கைவிட்டு தற்காலிக குடியிருப்பிற்கு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து தேனி வட்டாட்சியர் தற்காலிக குடியிருப்பு அமைந்திருந்த பகுதிக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், பல கட்டப் போராட்டம் நடத்தி தங்களது குடியுரிமைகளை ஒப்படைத்துவிட்டு மலைப்பகுதிக்கு குடிபெயர்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro: தேனி அருகே பாதை வசதி கேட்டு தேசியக்கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அரை நிர்வான போராட்டத்தில் ஈடுபட்ட இந்திரா காலணி பொதுமக்கள்.



Body: தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி அருகே உள்ளது இந்திரா நகர் குடியிருப்பு. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கு என இப்பகுதியில் அரசு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது. நாளடைவில் மக்கள் இப்பகுதிக்கு அதிகம் குடிபெயர்ந்து தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு என சுக்குவாடன்பட்டி வழியாக பிரதான பாதை ஒன்று இருந்தது. அந்த பாதை சற்று தொலைவு காரணமாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இதே பாதையை அரசு வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று கடந்த 14ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்று சுவர் எழுப்பினார். இதனால் இப்பகுதி மக்களுக்கான பாதை தடைபட்டது. இதன் காரணமாக மீண்டும் அதே பாதையை வழங்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்பை காலி செய்து ஊஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் தற்காலிக குடில் அமைத்து அங்கேயே சமைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கியுள்ளனர்.
அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்களாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நான்காம் நாள் போராட்டம் என்று கையில் தேசியக் கொடியை ஏந்தி அரை நிர்வாணத்துடன் புளியந்தோப்பு பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் மேற்பட்டோர் பெண்கள் உட்பட ஊர்வலமாக சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பேரணி கைவிட்டு தற்காலிக குடியிருப்பிற்கு கலைந்து சென்றனர். தொடர்ந்து தேனி வட்டாட்சியர் தற்காலிக குடியிருப்பு அமைந்திருந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். இதற்கிடையே பிரதான பாதையான சுக்குவாடன்பட்டி பாதையை முறைகேடாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த பாதை முழுவதும் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்தை தங்களுக்கு ஏற்ற பாதையாக உள்ளதாகவும், அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக இருப்பதாகவும், எனவே அதே பாதையையே தங்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி கூறிவருகின்றனர்.


Conclusion: இல்லை என்றால் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தி தங்களது குடியுரிமைகளை ஒப்படைத்துவிட்டு மலைப்பகுதிக்கு குடிபெயர்வதாக அறிவித்தனர்.

பேட்டி : 1) பொன்னுத்தாய் (இந்திரா காலணி பகுதி பொதுமக்கள்)
2) முத்துமணி ( இந்திரா காலணி பகுதி பொதுமக்கள்)
3) ராஜதுரை ( இந்திரா காலணி பகுதி பொதுமக்கள் )
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.