தேனி மாவட்டத்தில், கேரள எல்லையோரம் அமைந்துள்ள மலைக்கிராமங்களான டாப் ஸ்டேஷன், போடிமெட்டுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் ஜீப் மூலம் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும். குறிப்பாக, டாப் ஸ்டேஷன் மலை கிராமத்திற்கு கேரள மாநிலம் மூணாறு வழியாகத்தான் பொருள்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக, இரண்டு மாநில எல்லைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக்கிராம மக்களுக்கான அத்தியாவசிய உதவி பொருள்கள், காய்கறிகள், மளிகை உள்ளிட்டவற்றை வாகனத்தில் ஏற்றி சென்ற வருவாய் துறையினர் போடிமெட்டு சோதனைச்சாவடியை கடக்க முயன்றனர்.
அப்போது, தேனி மாவட்ட ஆட்சியரின் அனுமதிக் கடிதம் இல்லையென்று, சோதனைச் சாவடியில் கேரள காவல் துறையினர் தமிழ்நாடு வாகனங்களை அனுமதிக்காமல் தடுத்துநி றுத்தினர்.
இதையடுத்து, போடி வட்டாட்சியர் மணிமாறன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும், கேரள காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டதால், வருவாய் துறையினர் திரும்பிவந்துவிட்டனர்.
கேரள காவல் துறையின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு செல்லும் உணவுப்பொருள் வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேனி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ: அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்!