ETV Bharat / state

7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - கூச்சலிட்டதால் தீ வைத்த கொடூரம்

author img

By

Published : Jul 2, 2022, 9:05 PM IST

தேனியில் ஏழு வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டபோது சிறுமி கூச்சலிட்டதால் சிறுமிக்கு தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்
7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

தேனி: உத்தமபாளையம் அருகேவுள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று பள்ளி விடுமுறை என்பதால் ஊரின் அருகே உள்ள அங்கன்வாடி மையம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை அழைத்துள்ளார்.

சிறுமியும் அந்நபர் அருகே சென்றதும் அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி தன்னை இறக்கி விடுமாறு கூச்சலிடத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்நபர் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீ வைத்தார்.

காட்டன் உடை அணிந்திருந்ததால் தி மளமளவென பற்றி எரிந்தது. இதனை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்த வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ உமேஷ் பிரவீன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 70 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் மீது தீ வைத்த ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 24ஆவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

தேனி: உத்தமபாளையம் அருகேவுள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று பள்ளி விடுமுறை என்பதால் ஊரின் அருகே உள்ள அங்கன்வாடி மையம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை அழைத்துள்ளார்.

சிறுமியும் அந்நபர் அருகே சென்றதும் அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி தன்னை இறக்கி விடுமாறு கூச்சலிடத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்நபர் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீ வைத்தார்.

காட்டன் உடை அணிந்திருந்ததால் தி மளமளவென பற்றி எரிந்தது. இதனை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்த வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ உமேஷ் பிரவீன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 70 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் மீது தீ வைத்த ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 24ஆவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.