ETV Bharat / state

'ரூ.850 கோடி செலவு செய்து தேர்தலில் வெற்றிபெற்றவர் ஓபி.எஸ். மகன்...!' - Latest theni news

தேனி: துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ரூ.850கோடி செலவு செய்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதாக திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

OP Raveendranath kumar spent Rs.850 Crores to win in LS Election: Thanga TamilSelvan
OP Raveendranath kumar spent Rs.850 Crores to win in LS Election: Thanga TamilSelvan
author img

By

Published : Oct 9, 2020, 10:53 PM IST

தேனி ஒன்றிய திமுக சார்பில் 'எல்லோரும் நம்முடன்' என்ற பெயரில் இனையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமில், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ''தற்போது நடக்கின்ற அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததனால் எனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தேன். ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவில் இணைந்தேன்.

வருகின்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை ஸ்டாலின் எனக்கு வழங்கினார். இன்னும் ஆறு மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்துவிடுவார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணம் இருக்கலாம். ஆனால் மக்கள் செல்வாக்கு கிடையாது. அவரது மகன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 850 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை யாராவது பார்த்ததுண்டா? நானெல்லாம் ஒரு கோடி ரூபாயைக் கூட கண்ணில் பார்த்ததில்லை.

தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

இந்த பணம் எல்லாம் ஊழல் செய்ததால் கிடைத்திருப்பது என அப்பட்டமாக தெரிகிறது. ஊழல் செய்த பணத்தைக் கொண்டு தேர்தலில் ஒரு முறை வெற்றி பெறலாம். மறுமுறை மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்'' என்றார்.

இதையும் படிங்க:உன் மகன், உன்னிடம் வருவான் என்றார் ஜெ., - இன்னும் அது நடக்கவில்லை!

தேனி ஒன்றிய திமுக சார்பில் 'எல்லோரும் நம்முடன்' என்ற பெயரில் இனையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமில், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ''தற்போது நடக்கின்ற அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததனால் எனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தேன். ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவில் இணைந்தேன்.

வருகின்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை ஸ்டாலின் எனக்கு வழங்கினார். இன்னும் ஆறு மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்துவிடுவார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணம் இருக்கலாம். ஆனால் மக்கள் செல்வாக்கு கிடையாது. அவரது மகன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 850 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை யாராவது பார்த்ததுண்டா? நானெல்லாம் ஒரு கோடி ரூபாயைக் கூட கண்ணில் பார்த்ததில்லை.

தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

இந்த பணம் எல்லாம் ஊழல் செய்ததால் கிடைத்திருப்பது என அப்பட்டமாக தெரிகிறது. ஊழல் செய்த பணத்தைக் கொண்டு தேர்தலில் ஒரு முறை வெற்றி பெறலாம். மறுமுறை மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்'' என்றார்.

இதையும் படிங்க:உன் மகன், உன்னிடம் வருவான் என்றார் ஜெ., - இன்னும் அது நடக்கவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.