ETV Bharat / state

NEET தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம் -மும்பை செல்லும் சிபிசிஐடி

தேனி: நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

author img

By

Published : Sep 26, 2019, 8:22 PM IST

neet exam

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவரின் தாய் கயல்விழி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு

மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல் துறையினர் தற்போது அழைத்து சென்றனர்.

முன்னதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக கொண்டு செல்லப்பட்டு பின் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனிடம் சிபிசிஐடி அலுவலர்கள் நடத்திய விசாரணையில் இடைத்தரகர்கள் விவரம் கிடைத்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி மும்பை செல்ல முடிவெடுத்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவரின் தாய் கயல்விழி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு

மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல் துறையினர் தற்போது அழைத்து சென்றனர்.

முன்னதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக கொண்டு செல்லப்பட்டு பின் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனிடம் சிபிசிஐடி அலுவலர்கள் நடத்திய விசாரணையில் இடைத்தரகர்கள் விவரம் கிடைத்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி மும்பை செல்ல முடிவெடுத்துள்ளது.

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.
சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு தேனி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாணவரின் தாய் கயல்விழி மீது வழக்கு ஏதும் செய்யாமல் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா மற்றும்அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் தற்போது அழைத்து சென்றுள்ளனர். முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக கொண்டு செல்லப்பட்டு பின் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.



Conclusion: நீட் தேர்வு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தேனி க.விலக்கு காவல்நிலையத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகாரில் மாணவர் உதித்சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு உதித்சூர்யா தாக்கல் செய்தார். அதற்கு முதலில் சிபிசிஐடி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நீதிபதியின் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.