ETV Bharat / state

நீட்தேர்வு ஆள்மாறாட்டம்: இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் எனத் தகவல்!

தேனி: நீட் தோ்வில் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.

author img

By

Published : Oct 2, 2019, 6:10 PM IST

போலி மருத்துவர் முகமது சபி

கடந்த இரண்டு நாட்களாக தேனி சிபிசிஐடி காவல்துறையினர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கிய தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்து விட்டு முறையாக பட்டம் பெறாமல், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் தேனி சிபிசிஐடி விசாரணை

போலி மருத்துவராக செயல்பட்டு வந்த முகமது சபி, தனது மகனையும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என சிபிசிஐடி காவல்துறையிடமிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.

இதையடுத்து இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த கோவிந்தராஜனை போலவே இடைத்தரகர்கள் ஜெயராமன், வேதாசலம் ஆகியோரும் முன்னாள் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது முகமது சபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்க:

நீட் ஆள்மாறாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் சிக்குகிறார்கள்?

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ”தப்பிய மகன், சிக்கிய தந்தை”​​​​​​​

நீட் ஆள்மாறட்ட வழக்கில் இடைத்தரகர் கைது - சிபிசிஜடி தீவிர விசாரணை​​​​​​​

கடந்த இரண்டு நாட்களாக தேனி சிபிசிஐடி காவல்துறையினர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கிய தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்து விட்டு முறையாக பட்டம் பெறாமல், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் தேனி சிபிசிஐடி விசாரணை

போலி மருத்துவராக செயல்பட்டு வந்த முகமது சபி, தனது மகனையும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என சிபிசிஐடி காவல்துறையிடமிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.

இதையடுத்து இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த கோவிந்தராஜனை போலவே இடைத்தரகர்கள் ஜெயராமன், வேதாசலம் ஆகியோரும் முன்னாள் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது முகமது சபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்க:

நீட் ஆள்மாறாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் சிக்குகிறார்கள்?

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ”தப்பிய மகன், சிக்கிய தந்தை”​​​​​​​

நீட் ஆள்மாறட்ட வழக்கில் இடைத்தரகர் கைது - சிபிசிஜடி தீவிர விசாரணை​​​​​​​

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இர்பானின் தந்தை முகமது சபி போலி மருத்துவர்.. சிபிசிஐடி போலீசார் தகவல்.Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை முகமது சபியை கடந்த இரண்டு நாட்களாக தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முகம்மது சபியிடம் நடத்திய விசாரணையில், 3ஆண்டுகள் மட்டும் மருத்துவ படிப்பு படித்து விட்டு முறையாக பட்டம் பெறாமல், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. போலி மருத்துவராக செயல்பட்டு வந்த முகம்மது சபி, தனது மகனையும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என சிபிசிஐடி வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இடைத்தரகராக செயல்பட்ட ரசீத் என்பவரை அறிமுகப்படுத்திய கோவிந்தராஜன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுராக உள்ளார். மேலும் ஜெயராமன் மற்றும் வேதாச்சலம் என ஆகிய இருவரும் முன்னாள் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் கோவிந்தராஜ் என்பவர் நேற்று இரவு சிபிசிஐடி போலீசாரால் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
.Conclusion: இதனையடுத்து முகம்மது சபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக தற்போது சிபிசிஐடி போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.