ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது- சிபிசிஐடி

author img

By

Published : Feb 26, 2020, 7:58 AM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர் விசாரணைக்கு பின்பு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிசிஐடி அலுவலகம்
சிபிசிஐடி அலுவலகம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முதன் முதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை ஆறு மாணவர்கள் அவர்களது பெற்றோர், இரண்டு இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நீட் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ரசீத், அவருக்கு நேரடி தொடர்புடைய முக்கிய இடைத்தரகர் வேதாச்சலம் என இருவர் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி போலீசார் சேலம் சிறைச்சாலையில் இருந்த வேதாச்சலத்தை கடந்த 20ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேனி சிறைச்சாலைக்கு இடைத்தரகர் வேதாச்சலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

வேதாசலத்திடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ரஷீத் பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் பார்க்க: நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் ஒரு வழக்குப்பதிவு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முதன் முதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை ஆறு மாணவர்கள் அவர்களது பெற்றோர், இரண்டு இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நீட் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ரசீத், அவருக்கு நேரடி தொடர்புடைய முக்கிய இடைத்தரகர் வேதாச்சலம் என இருவர் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி போலீசார் சேலம் சிறைச்சாலையில் இருந்த வேதாச்சலத்தை கடந்த 20ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேனி சிறைச்சாலைக்கு இடைத்தரகர் வேதாச்சலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

வேதாசலத்திடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ரஷீத் பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் பார்க்க: நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் ஒரு வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.