ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: ஒருநாள் காவலில் மாணவன் இர்பான்

author img

By

Published : Oct 14, 2019, 5:19 PM IST

Updated : Oct 14, 2019, 8:58 PM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவன் இர்பானை சிபிசிஐடி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

theni court granted to cbcid take custody for irfan

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தேனி சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் இர்பான் ஆள்மாறாட்டம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் சில நாள்களாக தலைமறைவாகியிருந்தார். இவரை சிபிசிஐடி காவல் துறையினர் தேடிவந்தநிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் இன்று விசாரணைக்காக தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒருநாள் காவலில் மாணவன் இர்பான்

இர்பானிடம் சிபிசிஐடி காவல் துறையினர் ஐந்து நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இன்று மதியம் முதல் நாளை மதியம்வரை விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

இதனையடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாணவன் இர்பான் அழைத்துசெல்லப்பட்டு ஆய்வாளர் சித்ராதேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தேனி சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் இர்பான் ஆள்மாறாட்டம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் சில நாள்களாக தலைமறைவாகியிருந்தார். இவரை சிபிசிஐடி காவல் துறையினர் தேடிவந்தநிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் இன்று விசாரணைக்காக தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒருநாள் காவலில் மாணவன் இர்பான்

இர்பானிடம் சிபிசிஐடி காவல் துறையினர் ஐந்து நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இன்று மதியம் முதல் நாளை மதியம்வரை விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

இதனையடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாணவன் இர்பான் அழைத்துசெல்லப்பட்டு ஆய்வாளர் சித்ராதேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது!

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த தர்மபுரி மாணவர் இர்பானை சிபிசிஐடி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.




Body: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பான் என்பவரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து அவர் தலைமறைவாகினார். மேலும் இந்த ஆள்மாறாட்டத்திற்கு முக்கிய காரணமாக கேரளாவை சேர்ந்த முகம்மது ரசீத் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்களை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கினர்.
இதில் மாணவர் இர்பான் அக்டோபர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து சேலத்தில் தேனிக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மாணவர் இர்பானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் இன்று தேனி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதன் மீதான விசாரணை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் சிபிசிஐடி போலீசார் சார்பில் மாணவர் இர்பானிடம் 5நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் இன்று மதியம் முதல் நாளை மதியம் வரை ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Conclusion: இதனையடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாணவர் இர்பான் கொண்டு வரப்பட்டு ஆய்வாளர் சித்ராதேவி முன்னிலையில் வேண்டும் விசாரணை நடைபெற்று வருகின்றன.
Last Updated : Oct 14, 2019, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.