ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு; மாணவர் உதித் சூர்யா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்!

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிடம் நாளை விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 25, 2019, 11:36 PM IST

neet student uthith surya forgery case

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவை தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யாவை அவரது பெற்றோருடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்த காவல் துறையினர், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தற்போது தேனிக்கு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் அழைத்து வரப்படுகின்றனர்.

இதனிடையே தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு துணை கண்காணிப்பாளர் ஹாட்வின் ஜெகதீஷ்குமார் வருகை தந்துள்ளார். இதுவரை இந்த வழக்கின் தொடக்கத்தில் விசாரித்து வந்த சிறப்பு தனிப்படை ஆய்வாளர் உஷாராணி அவரை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தார். பின்னர் நீண்ட நேரம் வழக்கு குறித்த தகவல்கள் ஆராயப்பட்டன.

சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்

இதுகுறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தேனிக்கு கொண்டு வரப்படும் மாணவர் உதித் சூர்யாவிடம் நாளை காலை விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் நாளை காலை தேனி அலுவலகத்திற்கு வரவுள்ளார்.

மேலும் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவக்குழு பெண் பேராசிரியைகள் மூன்று பேர் ஆகியோரிடம் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு; மாணவர் உதித் சூர்யா திருப்பதியில் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவை தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யாவை அவரது பெற்றோருடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்த காவல் துறையினர், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தற்போது தேனிக்கு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் அழைத்து வரப்படுகின்றனர்.

இதனிடையே தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு துணை கண்காணிப்பாளர் ஹாட்வின் ஜெகதீஷ்குமார் வருகை தந்துள்ளார். இதுவரை இந்த வழக்கின் தொடக்கத்தில் விசாரித்து வந்த சிறப்பு தனிப்படை ஆய்வாளர் உஷாராணி அவரை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தார். பின்னர் நீண்ட நேரம் வழக்கு குறித்த தகவல்கள் ஆராயப்பட்டன.

சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்

இதுகுறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தேனிக்கு கொண்டு வரப்படும் மாணவர் உதித் சூர்யாவிடம் நாளை காலை விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் நாளை காலை தேனி அலுவலகத்திற்கு வரவுள்ளார்.

மேலும் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவக்குழு பெண் பேராசிரியைகள் மூன்று பேர் ஆகியோரிடம் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு; மாணவர் உதித் சூர்யா திருப்பதியில் கைது

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் நாளை விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தகவல்.


Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித்சூர்யாவை தேனி சிறப்பு தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யாவை அவரது பெற்றோருடன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் கைது செய்த போலீசார் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தற்போது தேனிக்கு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் அழைத்து வரப்படுகின்றனர். இதனிடையே தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு துணை கண்காணிப்பாளர் ஹாட்வின் ஜெகதீஷ்குமார் வருகை தந்துள்ளார். இவரை இந்த வழக்கின் துவக்கத்தில் விசாரித்து வந்த சிறப்பு தனிப்படை ஆய்வாளர் உஷாராணி சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தார்.
பின்னர் நீண்ட நேரம் வழக்கு குறித்த தகவல்கள் ஆராயப்பட்டன. இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தேனிக்கு கொண்டு வரப்படும் மாணவர் உதித்சூர்யாவிடம் நாளை காலை விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.





Conclusion: இந்த வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் நாளை காலை தேனி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார். மேலும் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் மற்றும் மருத்துவக்குழு பெண் பேராசிரியைகள் மூன்று பேரிடம் நாளை விசாரணை நடைபெற உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.