ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்; மாணவன் ராகுலுக்கு 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல்!

author img

By

Published : Sep 30, 2019, 11:46 AM IST

தேனி : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர் ராகுல், அவரது தந்தையை கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள்


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ், மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி அலுவலர்கள் அழைத்துச்சென்றனர்.

மாணவர் ராகுல், அவரது தந்தையை கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள்

இது குறித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தந்தை, மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராகுலும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : நீட் தேர்வில் ஆறு பேர் ஆள்மாறாட்டம் - திடுக்கிடும் தகவல்


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ், மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி அலுவலர்கள் அழைத்துச்சென்றனர்.

மாணவர் ராகுல், அவரது தந்தையை கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள்

இது குறித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தந்தை, மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராகுலும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : நீட் தேர்வில் ஆறு பேர் ஆள்மாறாட்டம் - திடுக்கிடும் தகவல்

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.


Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 4மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தந்தை மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் ராகுல்மற்றும் அவரது தந்தை டேவிஸ் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தகுந்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றனர்.




Conclusion: தொடர்ந்து நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.