ETV Bharat / state

பெரியகுளம் அருகே மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி!

author img

By

Published : Dec 16, 2019, 7:29 PM IST

தேனி; பெரியகுளம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

People hospitalized with mysterious fever
People hospitalized with mysterious fever

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், அட்டனம்பட்டி, புல்லக்காபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் மர்ம காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவி பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள், என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலைகளில் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். இதனைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:

"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், அட்டனம்பட்டி, புல்லக்காபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் மர்ம காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவி பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள், என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலைகளில் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். இதனைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:

"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்

Intro: பெரியகுளம் அருகே மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி. 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் அனுமதி.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், அட்டனம்பட்டி, புல்லக்காபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டிற்கு ஒருவருக்கு ஏற்படும் மர்ம காய்ச்சல் தொற்றால் உடன் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறியவர், பெண்கள், முதியவர் என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய் தொற்று உள்ளவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலைகளில் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். இதனை கட்டுப்படுத்த ஊராட்சி, மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
Conclusion: மர்ம காய்ச்சலால் பாதிப்பால் தேவதானப்பட்டி பகுதி பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
         
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.