ETV Bharat / state

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்குவதில் காலதாமதம்

தேனி :ஆண்டிபட்டி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், ஏழ்மையில் உள்ள மாணவர்கள் தனியார் கல்லூரிக்கு தள்ளப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு முடித்த மாணவி
author img

By

Published : May 2, 2019, 9:46 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்படுகிறது. இளங்கலை இயற்பியல், கணிதம், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் என பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த இக்கல்லுரியில் ஏழ்மையில் உள்ள மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வந்தனர். இதனைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கோட்டூர் பகுதியிலும் மதுரை காமராஜர் பல்கலை.யின் உறுப்புக்கல்லூரி செயல்பட தொடங்கியது. இதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் 6 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

தேனி ஆண்டிப்பட்டி

இந்நிலையில்,தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இரு உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் 2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரியில் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி விரைவில் விண்ணப்ப படிவங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்படுகிறது. இளங்கலை இயற்பியல், கணிதம், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் என பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த இக்கல்லுரியில் ஏழ்மையில் உள்ள மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வந்தனர். இதனைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கோட்டூர் பகுதியிலும் மதுரை காமராஜர் பல்கலை.யின் உறுப்புக்கல்லூரி செயல்பட தொடங்கியது. இதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் 6 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

தேனி ஆண்டிப்பட்டி

இந்நிலையில்,தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இரு உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் 2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரியில் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி விரைவில் விண்ணப்ப படிவங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro: ஆண்டிபட்டியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்குவதில் காலதாமதம். ஏழ்மையில் உள்ள மாணவர்கள் தனியார் கல்லூரிக்கு தள்ளப்படும் அவலம்.


Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்படுகிறது. இளங்கலை அறிவியலில் இயற்பியல், கணிதம்,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் என பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த இக்கல்லூரியின் மூலம் ஏழ்மையில் உள்ள ஏராளமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் கோட்டூர் பகுதியிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட தொடங்கியது. அக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வந்தன.
இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் 6 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இரு உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆக மாற்றப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும்
மேற்கொள்ளப்படாததால் 2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் அரசு கல்லூரியில் கல்வி பயில இயலாமல் தனியார் கல்லூரிக்கு தள்ளப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆண்டிபட்டி கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கையில், வழக்கமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படப்படுவதற்கு முன்பாகவே முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளிலிருந்து விண்ணப்பப்படிவங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஆனால் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை உறுப்பு கல்லூரி இந்த ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்படுவதாக வெளியான அறிவிப்பால் தற்போது வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை.
மேலும் அரசுக் கல்லூரியாக மாற்றப்படுவதன் மூலம் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் உள்ள இரண்டு வகுப்புகள் குறைக்கப்பட்டு ஒரே வகுப்பாக செயல்பட உள்ளது. இதனால் 100 பேர் பயிலுகின்ற இடத்தில் பாதியாகக் குறைக்கப்பட்டு 50 பேர் மட்டுமே கல்வி கற்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிக்கு தள்ளப்படும் நிலையும் உண்டாவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து விண்ணப்பம் படிவம் வாங்குவதற்காக தினமும் வந்து செல்கிறோம். ஓரிரு நாட்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறி அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி விரைவில் விண்ணப்ப படிவங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion: பேட்டி : 1) பிரேம்குமார் ( ஆண்டிபட்டி கல்லூரி மாணவர்)
2) பிச்சைமணி ( பெற்றோர், உசிலம்பட்டி)
3) மோகன பிரியா ( மாணவி, உசிலம்பட்டி)
4) மாரியம்மாள் (பெற்றோர், பந்துவார்பட்டி)
5) முருகன் (மாணவர், பந்துவார்பட்டி)
6) சின்னச்சாமி ( பெற்றோர், பிராதுகாரன்பட்டி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.