ETV Bharat / state

குடி தண்ணீர் எடுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தேனி: போடி அருகே குடி தண்ணீர் எடுக்கச்சென்ற சலவைத் தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Sep 25, 2020, 9:00 PM IST

laundry-worker-electrocuted-while-fetching-drinking-water
laundry-worker-electrocuted-while-fetching-drinking-water

தேனி மாவட்டம் போடி திருவள்ளுவர் சிலை அருகே உள்ள எத்திராஜ் தெருவைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி மாரிமுத்து (55). இவர் தனது வீட்டருகே உள்ள நகராட்சி குடிநீர் குழாயில் இன்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழப்போனவர், அருகேயிருந்த எர்த் வயரை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போடி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மின்சாரம் தாக்கி சலவைத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் 600 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநிலத்தவர் 3 பேர் கைது!

தேனி மாவட்டம் போடி திருவள்ளுவர் சிலை அருகே உள்ள எத்திராஜ் தெருவைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி மாரிமுத்து (55). இவர் தனது வீட்டருகே உள்ள நகராட்சி குடிநீர் குழாயில் இன்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழப்போனவர், அருகேயிருந்த எர்த் வயரை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போடி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மின்சாரம் தாக்கி சலவைத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் 600 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநிலத்தவர் 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.