ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்ப்போம்... கேரளா சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர்... - வி டி சதீஷன் பேச்சு

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம் என்று கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்ப்போம் என கேரளா சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்ப்போம் என கேரளா சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
author img

By

Published : Aug 13, 2022, 7:31 PM IST

பொள்ளாச்சி: தமிழ்நாடு - கேரளா என இரு மாநிலங்களையும் பாதிக்கும் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சித்தூர் அருகே உள்ள அணிக்கோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வி.டி. சதீசன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான அரசாங்கமாக செயல்படவில்லை. மக்களுக்கு விரோதமான அரசாகவே செயல்படுகிறது. கேரள மாநிலத்தில் போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மக்களை வெகுவாக பாதிக்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க கூட முடியாத நிலையில் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை. மாநிலத்தின் பெரும் பகுதியிலும் தரமான ரோடுகள் இல்லை. எங்கும் குண்டும் குழியுமாக உள்ளன. தங்கக்கட்டி பிஸ்கட் வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காகவே போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.டி. சதீசன், ”ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தால் கேரள மாநில பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, நெகமம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.

ஆகவே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து கேரள சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்புவோம். கேரள அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுக்கும். அதோடு கடுமையான போராட்டங்களையும் நடத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் 15 நாட்களுக்குப்பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

பொள்ளாச்சி: தமிழ்நாடு - கேரளா என இரு மாநிலங்களையும் பாதிக்கும் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சித்தூர் அருகே உள்ள அணிக்கோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வி.டி. சதீசன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான அரசாங்கமாக செயல்படவில்லை. மக்களுக்கு விரோதமான அரசாகவே செயல்படுகிறது. கேரள மாநிலத்தில் போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மக்களை வெகுவாக பாதிக்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க கூட முடியாத நிலையில் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை. மாநிலத்தின் பெரும் பகுதியிலும் தரமான ரோடுகள் இல்லை. எங்கும் குண்டும் குழியுமாக உள்ளன. தங்கக்கட்டி பிஸ்கட் வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காகவே போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.டி. சதீசன், ”ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தால் கேரள மாநில பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, நெகமம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.

ஆகவே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து கேரள சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்புவோம். கேரள அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுக்கும். அதோடு கடுமையான போராட்டங்களையும் நடத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் 15 நாட்களுக்குப்பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.