ETV Bharat / state

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்தண்டனை - தேனி கூடுதல் நீதிமன்றம் உத்தரவு! - தேனி மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்

தேனி: சின்னமனூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2 sentenced to life prisonment
author img

By

Published : Aug 28, 2019, 4:48 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உ.அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). இருவரும் நண்பர்கள். இதில் பால்பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்பவரிடம் பால்பாண்டியின் மூத்த மனைவி செல்வி சிரித்து பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பால்பாண்டி, முத்தையாவை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதனால், தனது நண்பர் பாண்டியனுடன் சேர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உறங்கிக்கொண்டிருந்த முத்தையாவை கல்லால் தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பால்பாண்டி, பாண்டியன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உ.அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). இருவரும் நண்பர்கள். இதில் பால்பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்பவரிடம் பால்பாண்டியின் மூத்த மனைவி செல்வி சிரித்து பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பால்பாண்டி, முத்தையாவை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதனால், தனது நண்பர் பாண்டியனுடன் சேர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உறங்கிக்கொண்டிருந்த முத்தையாவை கல்லால் தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பால்பாண்டி, பாண்டியன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்
Intro: சின்னமனூர் அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(48). இவரும் முத்துச்சாமிபுரத்தை சேர்ந்த பாண்டியன்(49) ஆகிய இருவரும் நண்பர்கள். இதில் பால்பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்தவர் முத்தையா. இவருக்கு அழகேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
இதில் பால்பாண்டியின் மூத்த மனைவி செல்வியும் முத்தையாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதை பார்த்த பால்பாண்டி மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் முத்தையாவை கொலை செய்ய திட்டம் தீட்டி கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி விழா கலைநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு முத்துச்சாமிபுரத்தில் உள்ள கடையில் உள்ள திண்ணையில் முத்தையா உறங்கிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த பால்பாண்டி, பாண்டியன் ஆகிய இருவரும் முத்தையாவை கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பால்பாண்டி, பாண்டியன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும் மற்றும் 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.


Conclusion: இதனைத் தொடர்ந்து இருவரையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.