ETV Bharat / state

நகைக் கடையில் திருட்டு: சிசிடிவி உதவியோடு போலீசார் விசாரணை!

author img

By

Published : Jul 31, 2019, 12:15 PM IST

தேனி: கம்பத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

நகைக் கடையில் திருடிய பெண் கைது: சிசிடிவி வெளியீடு!

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று நகையின் மொத்த இருப்பை சரிபார்க்கும்போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் ஒரு ஜோடி வளையலைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

நகைக் கடையில் திருடிய பெண் கைது: சிசிடிவி வெளியீடு!

இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் செல்வகுமார் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்ததில் நகையைத் திருடியது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (60), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சரோஜா (40) ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டு கும்பலை தீவிரமாக காவல் துறையினர் தேடிவந்த நிலையில், கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் பாண்டியம்மாளை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஜோடி தங்க வளையல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மற்றொரு குற்றவாளியான சரோஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று நகையின் மொத்த இருப்பை சரிபார்க்கும்போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் ஒரு ஜோடி வளையலைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

நகைக் கடையில் திருடிய பெண் கைது: சிசிடிவி வெளியீடு!

இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் செல்வகுமார் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்ததில் நகையைத் திருடியது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (60), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சரோஜா (40) ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டு கும்பலை தீவிரமாக காவல் துறையினர் தேடிவந்த நிலையில், கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் பாண்டியம்மாளை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஜோடி தங்க வளையல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மற்றொரு குற்றவாளியான சரோஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Intro: தேனி மாவட்டம் கம்பத்தில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வளையல்கள் பறிமுதல்.
Body:          தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று கடையில் உள்ள நகையின் மொத்த இருப்பை சரிபார்க்கும்போது அதில், 28 கிராம் அளவிற்கு ஒரு ஜோடி தங்க வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒருலட்சம் ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது.         
         இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்த போது கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் ஒரு ஜோடி வளையல்களை திருடுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கெண்டு நடத்தினார்.
         விசாரணையில் வளையல்களைத் திருடியது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (60) மற்றும் ஆவாரம்பட்டியை சேர்ந்த சரோஜா (40) ஆகியோர் எனத் தெரியவந்தது.
         இதனையடுத்து திருட்டுக்கும்பலை தீவிரமாக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணி மனை பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த போது அவ்வழியே வந்த பாண்டியம்மாளை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஜோடி தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Conclusion: இது குறித்து வழக்கு பதிவு செய்த கம்பம் காவல்துறையினர் பாண்டியம்மாளை கைது செய்து, மற்றொரு குற்றவாளியான சரோஜாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.