ETV Bharat / state

51 அடியை எட்டிய மஞ்சளாறு அணை: தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால்,அணையில் நீர் மட்டம் 51 அடியை எட்டியதைத்தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 28, 2022, 8:35 PM IST

51 அடியை எட்டிய மஞ்சளார் அணை : தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
51 அடியை எட்டிய மஞ்சளார் அணை : தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்தது. இன்று(ஜூலை 28) காலை நிலவரப்படி 50.70 அடியாக இருந்தது. இதனிடையே காலை நீர்வரத்து 140 கன அடியாக இருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அணையின் நீர் மட்ட உயரமான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மொத்த நீர் இருப்பு 357.10 மில்லியன் கன அடியாகியுள்ளது.

மேலும் அணைக்கு நீர் வரத்தானது 140 கன அடியாக உள்ளதால் விரைவில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

51 அடியை எட்டிய மஞ்சளாறு அணை: தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதையும் படிங்க: விபத்தில் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த தேனி கலெக்டர்... குவியும் பாராட்டு!

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்தது. இன்று(ஜூலை 28) காலை நிலவரப்படி 50.70 அடியாக இருந்தது. இதனிடையே காலை நீர்வரத்து 140 கன அடியாக இருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அணையின் நீர் மட்ட உயரமான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மொத்த நீர் இருப்பு 357.10 மில்லியன் கன அடியாகியுள்ளது.

மேலும் அணைக்கு நீர் வரத்தானது 140 கன அடியாக உள்ளதால் விரைவில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

51 அடியை எட்டிய மஞ்சளாறு அணை: தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதையும் படிங்க: விபத்தில் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த தேனி கலெக்டர்... குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.