ETV Bharat / state

சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர்

author img

By

Published : Jun 25, 2019, 7:52 AM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள  கண்மாயில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ,பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது நந்தியாபுரம் கண்மாய். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி அடைவதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இதனிடையே, கடந்த 10 வருடங்களாக கண்மாயில் புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் காணப்பட்டன. இதனால் மழை நீரை போதிய அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை உருவானதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர்

இதைத்தொடர்ந்து, கண்மாயை தூர்வாரி, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் பல முறை ஆட்சியர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் நந்தியாபுரம் கண்மாய் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையினர் நேற்று தொடங்கியுள்ளனர்.இரண்டு ஜே.சி.பி இயந்திரம், கனரக ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது நந்தியாபுரம் கண்மாய். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி அடைவதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இதனிடையே, கடந்த 10 வருடங்களாக கண்மாயில் புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் காணப்பட்டன. இதனால் மழை நீரை போதிய அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை உருவானதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர்

இதைத்தொடர்ந்து, கண்மாயை தூர்வாரி, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் பல முறை ஆட்சியர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் நந்தியாபுரம் கண்மாய் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையினர் நேற்று தொடங்கியுள்ளனர்.இரண்டு ஜே.சி.பி இயந்திரம், கனரக ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

Intro:         பெரியகுளத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் கணமாய் தூர்வாரும் பணியை துவக்கிய பொதுப்பணித்துறையினர்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது நந்தியாபுரம் கண்மாய். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி அடைவதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் திகழ்கின்றது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக கண்மாயில் புதர் மண்டியும், சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமித்து காணப்பட்டது. இதனால் மழை நீரை போதிய அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை உண்டானதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் இது தொடர்பாக கண்மாயை தூர்வாரி, உரிய நடவடிக்கை எடுத்திடக்கோரி பல முறை ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின், பங்களிப்புடன் நந்தியாபுரம் கண்மாய் தூர்வாறும் பணியை பொதுப்பணித்துறையினர் இன்று தொடங்கியுள்ளனர். இரண்டு ஜே.சி.பி இயந்திரம் மற்றும் கனரக ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
Conclusion: கண்மாய் சுற்றி வளர்ந்துள்ள புதர்களை அகற்றிய பின்பு பாசனத்திற்கு தேவையான அளவு கண்மாயில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.