ETV Bharat / state

ஊரடங்கால் முடங்கிய மலை கிராமம்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உதவிக்கரம் - தேனியில் ஊரடங்கால் முடங்கிய மலைக் கிராம்: உதவிக்கரம் நீட்டி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

தேனி: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஹைவேவிஸ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறார்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் ஓய்வுபெற்ற ராவண வீரர்
மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் ஓய்வுபெற்ற ராவண வீரர்
author img

By

Published : Apr 24, 2020, 3:33 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகராஜா மெட்டு, இரவங்கலாறு, வென்னியாறு ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.இவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக 25 கி.மீ., தொலைவில் உள்ள சின்னமனூருக்குத்தான் செல்லவேண்டும்.

ஆனால், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடைபட்டதால், அப்பகுதி மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நிலையை அறிந்த சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வினோத்குமார். தனது மாத ஓய்வூதிய தொகையை கொண்டு அவர்களுக்கு உதவிவருகிறார்.

ஊரடங்கால் முடங்கியுள்ள இந்த மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கில் இவரது மாத ஓய்வூதியம், தன்னார்வலர்கள், சின்னமனூர் பாஜக சார்பில் வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு முதல்கட்டமாக கடந்த வாரம் 100 குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் ஓய்வுபெற்ற ராவண வீரர்

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து இதுபோல் ஹைவேவிஸ் மலை கிராம பகுதியிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அடுத்தடுத்து நிவாரணப் பொருள்கள் வழங்கவுள்ளதாக கிராம மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்களுக்கு உதவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகராஜா மெட்டு, இரவங்கலாறு, வென்னியாறு ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.இவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக 25 கி.மீ., தொலைவில் உள்ள சின்னமனூருக்குத்தான் செல்லவேண்டும்.

ஆனால், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடைபட்டதால், அப்பகுதி மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நிலையை அறிந்த சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வினோத்குமார். தனது மாத ஓய்வூதிய தொகையை கொண்டு அவர்களுக்கு உதவிவருகிறார்.

ஊரடங்கால் முடங்கியுள்ள இந்த மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கில் இவரது மாத ஓய்வூதியம், தன்னார்வலர்கள், சின்னமனூர் பாஜக சார்பில் வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு முதல்கட்டமாக கடந்த வாரம் 100 குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் ஓய்வுபெற்ற ராவண வீரர்

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து இதுபோல் ஹைவேவிஸ் மலை கிராம பகுதியிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அடுத்தடுத்து நிவாரணப் பொருள்கள் வழங்கவுள்ளதாக கிராம மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்களுக்கு உதவி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.