ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயார்' - துணை முதலமைச்சர்

author img

By

Published : Dec 1, 2019, 9:52 AM IST

தேனி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாமில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு
வேலைவாய்ப்பு முகாமில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில், பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் நேற்று மாலையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வான ஆயிரத்து 403 நபர்களுக்கான பணி நியமன ஆணை, 262 நபர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி, எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது' என்றார்.

வேலை வாய்ப்பு முகாமில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

இந்நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில், பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் நேற்று மாலையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வான ஆயிரத்து 403 நபர்களுக்கான பணி நியமன ஆணை, 262 நபர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி, எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது' என்றார்.

வேலை வாய்ப்பு முகாமில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

இந்நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி

Intro:          உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி.
Body:         தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இன்று தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. போடியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு தனியார் தொழில்நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வான 1403நபர்;களுக்கான பணி நியமன ஆணை மற்றும் 262நபர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
         பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது, உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி, எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.


Conclusion: இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.