ETV Bharat / state

முல்லைப்பெரியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு! - ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன்

தேனி: கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

student dead
author img

By

Published : Oct 29, 2019, 9:16 PM IST

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ஜீப் டிரைவர் அஸ்கர். இவரது மகன் முகமது யூனுஸ்(20) மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர், நண்பர்களுடன் நேற்று(28.10.19) மதியம் சுருளிப்பட்டி செல்லும் வழியில் தொட்டமன்துறையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார்.

நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்த முகமது யூனுஸ், கரைபுரண்டு ஓடிய தண்ணீர் வேகத்தில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாணவன் முகமது யூனிசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரமானதால், தேடும் பணியை நிறுத்தி விட்டு இன்று காலை மீண்டும் தேடுதல், மீட்புப் பணியை தொடங்கினர். இந்நிலையில், முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளாக நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட இடங்களில் முகமது யூனிசை தேடும் பணி தொடர்ந்தது.

கல்லூரி மாணவன் மரணம்

அப்போது, காமயகவுண்டன்பட்டி ஆற்று வழித்தடத்தில் முகமது யூனுஸ் தண்ணீருக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யூனுஸின் உடலை மீட்ட தீயனைப்புத் துறையினர் பிரேதப் பரிசேதனைக்காக கம்பம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ஜீப் டிரைவர் அஸ்கர். இவரது மகன் முகமது யூனுஸ்(20) மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர், நண்பர்களுடன் நேற்று(28.10.19) மதியம் சுருளிப்பட்டி செல்லும் வழியில் தொட்டமன்துறையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார்.

நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்த முகமது யூனுஸ், கரைபுரண்டு ஓடிய தண்ணீர் வேகத்தில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாணவன் முகமது யூனிசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரமானதால், தேடும் பணியை நிறுத்தி விட்டு இன்று காலை மீண்டும் தேடுதல், மீட்புப் பணியை தொடங்கினர். இந்நிலையில், முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளாக நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட இடங்களில் முகமது யூனிசை தேடும் பணி தொடர்ந்தது.

கல்லூரி மாணவன் மரணம்

அப்போது, காமயகவுண்டன்பட்டி ஆற்று வழித்தடத்தில் முகமது யூனுஸ் தண்ணீருக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யூனுஸின் உடலை மீட்ட தீயனைப்புத் துறையினர் பிரேதப் பரிசேதனைக்காக கம்பம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:         கம்பம் அருகே முல்லை ஆற்று நீரில் இழுத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு.
Body:         தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு காலனி பகுதியைச் சார்ந்த ஜீப் டிரைவர் அஸ்கர். இவரது மகன் முகமது யூனுஸ்(20) என்பவர், மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊரான கம்பம் வந்த முகமது யூனஸ், நண்பர்களுடன் நேற்று மதியம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தொட்டமன்துறையில் செல்லக்கூடிய முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்த முகமது யூனுஸ் தண்ணீர் வேகத்தால் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று முதல் முகமது யூனிசை தேடும் பணி நடைபெற்றது. இரவு நேரமாகியதால், தேடும் பணியை நிறுத்தி விட்டு இன்று காலை மீண்டும் மீட்புப் பணியை துவக்க முடிவு செய்தனர். இதனிடையே முல்லைப் பெரியாற்றில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இன்று இரண்டாம் நாளாக நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட இடங்களில் முகமது யூனிசை தேடும் பணியில் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
         இந்நிலையில் நாராயணத்தேவன்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி இடையே உள்ள ஆற்று வழித்தடத்தில் முகமது யூனுஸ் தண்ணீருக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலமாக இறந்து கிடந்த மாணவன் முகமது யூனஸின் உடலை மீட்;ட தீயனைப்பு துறையினர் பிரேதப்பரிசேதனைக்காக கம்பம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். மாணவன் இறப்பு குறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
         
Conclusion: ஆற்று நீரில் கல்லூரி மாணவன் அடித்துச்செல்லப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்;படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.