ETV Bharat / state

தேனியில் நாற்காலிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! - Road stir with theni chairs

தேனி: சின்னமனூர் அருகே 18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வராததால் அப்பகுதி மக்கள் நாற்காலிகளுடன் போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வரவில்லை என சாலை மறியல்
author img

By

Published : Nov 21, 2019, 7:33 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரமாக 18ஆம் கால்வாய் திகழ்கிறது.

கடந்த மாதம் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ஆம் கால்வாய் பகுதி பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியான போடியில் கூவலிங்க ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வரவில்லை என சாலை மறியல்

இந்நிலையில், டி.சிந்தலைச்சேரியில் உள்ள அரசமரத்துக்குளம், நல்லகுளம் ஆகிய கண்மாய்கள் இன்னும் நிரம்பாததால் அப்பகுதி மக்கள் இன்று நாற்காலிகளுடன் திடீரென போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் வட்டாச்சியர், பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரமாக 18ஆம் கால்வாய் திகழ்கிறது.

கடந்த மாதம் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ஆம் கால்வாய் பகுதி பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியான போடியில் கூவலிங்க ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வரவில்லை என சாலை மறியல்

இந்நிலையில், டி.சிந்தலைச்சேரியில் உள்ள அரசமரத்துக்குளம், நல்லகுளம் ஆகிய கண்மாய்கள் இன்னும் நிரம்பாததால் அப்பகுதி மக்கள் இன்று நாற்காலிகளுடன் திடீரென போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் வட்டாச்சியர், பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல்

Intro:         சின்னமனூர் அருகே நாற்காலிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.         
18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் வராததால் சிந்தலைச்சேரி பொதுமக்கள் ஆத்திரம். நாற்காலிகளுடன் போடி – சின்னமனூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். போக்குவரத்து பாதிப்பு.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது டி.சிந்தலைச்சேரி கிராமம். விவசாயத்தை பிரதானமாகக் கொண்டுள்ள இப்பகுதியின் நீராதாரமாக 18ஆம் கால்வாய் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ஆம் கால்வாய் பகுதி பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தேவாரம் சுத்தகங்கை ஓடையிலிருந்து 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியான போடியில் கூவலிங்க ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், 18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரியில் உள்ள அரசமரத்துக்குளம், நல்லகுளம் ஆகிய கண்மாய்கள்கள் நிரம்பாததால் அப்பகுதி கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நாற்காலிகளுடன் திடீரென போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும் வரையில் தண்ணீர் திறக்க வேண்டும் கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் தாசில்தார், பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த வாக்குறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 18ஆம் கால்வாயின் மூலம் தங்கள் பகுதியில் 168 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி அடைகின்றன. தற்போது திறக்கப்பட்;ட தண்ணீரால் இங்குள்ள கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயம் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டமும் குறையத்தொடங்கும். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர்.
Conclusion: இந்த சாலை மறியலால் சின்னமனூர் - போடி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.