ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை! - காவல் துறை அலட்சியம்... உறவினர்கள் போராட்டம்

தேனி: பூதிப்புரத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டறியாமல் அலட்சியம் காட்டிவந்த காவல் துறையினரின் மெத்தனப்போக்கைக் கண்டித்து உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சாலை முன் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Sep 22, 2019, 8:32 AM IST

protest

தேனி மாவட்டம் பூதிப்புரத்தைச் சேர்ந்தவரின் ஏழு வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாதவர். கடந்த நான்கு ஆண்டுகளாக அரண்மனைபுதூர் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தவர்களை கண்டறியாமல் அலட்சியம் காட்டிவந்துள்ளனர்.

இதனால், மனமுடைந்துபோன சிறுமியின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சிறுமியின் உறவினர்கள் கலைந்துசென்றனர்.

தேனி மாவட்டம் பூதிப்புரத்தைச் சேர்ந்தவரின் ஏழு வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாதவர். கடந்த நான்கு ஆண்டுகளாக அரண்மனைபுதூர் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தவர்களை கண்டறியாமல் அலட்சியம் காட்டிவந்துள்ளனர்.

இதனால், மனமுடைந்துபோன சிறுமியின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சிறுமியின் உறவினர்கள் கலைந்துசென்றனர்.

Intro: தேனி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த விவகாரம்..
சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலை மறியல்.


Body: தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவரின் 7 வயது மகள், மனநலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இவர் தேனி அருகே அரண்மனை புதூர் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்தவர்களை கண்டறியாமல், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி குழந்தையை பாலியல் தொந்தரவு செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.



Conclusion: சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த சாலை மறியல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.