ETV Bharat / state

100 விழுக்காடு வாக்குப்பதிவு- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!

author img

By

Published : Apr 9, 2019, 2:14 PM IST

தேனி : தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மனிதனின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை செலுத்திட தேர்தல் ஆணையம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து 100 விழுக்காடு வாக்கினை செலுத்திட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் 'ஏப்ரல் 18 தேர்தல் நாள்' '100 விழுக்காடு வாக்கு இந்தியர்களின் பெருமை' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இப்பேரணியானது கம்பம் - பெரியகுளம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மனிதனின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை செலுத்திட தேர்தல் ஆணையம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து 100 விழுக்காடு வாக்கினை செலுத்திட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் 'ஏப்ரல் 18 தேர்தல் நாள்' '100 விழுக்காடு வாக்கு இந்தியர்களின் பெருமை' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இப்பேரணியானது கம்பம் - பெரியகுளம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
Intro: 100% வாக்கு பதிவை வலியுறுத்தி தேனியில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி, மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.


Body: தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை பொதுமக்கள் அனைவரும் செலுத்திடும் வகையில், தேர்தல் ஆணையத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் துவங்கிய இப்பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பல்லவி பல்தேவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
"ஏப்ரல் -18 தேர்தல் நாள்" "100 சதவீத ஓட்டு இந்தியர்களின் பெருமை" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாற்றுத்திறனாளிகளின் வாகனத்தில் அமர்ந்த படி பேரணி நடைபெற்றது.
கம்பம் - பெரியகுளம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவு பெற்றது.




Conclusion: இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 50க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.