ETV Bharat / state

முல்லை பெரியாறு திட்டத்தை செயல்படுத்துவோம்: திமுக வேட்பாளர் மகாராஜன் உறுதி!

author img

By

Published : Apr 2, 2019, 6:13 PM IST

தேனி: ஆண்டிபட்டி வறட்சியைப் போக்க முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்திடுவோம் என ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்குறுதியளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் மகாராஜன்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் 18 சட்டமன்றத் தொதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன்

இந்நிலையில், ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தி ஆண்டிபட்டிக்கு தெற்கே உள்ள 152 கிராமங்களை பயனைடைய செய்வேன். ஆண்டிபட்டி தாலுகா நெசவாளர்களின் துயர் துடைக்க உயர் தர நெசவு ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உழவு, நெசவு மேம்பட பாடுபடுவேன் என தேர்தல் வாக்குறுதியளித்தார்.

தொகுதியின் வளர்ச்சிக்காக வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் லட்சுமிபுரம், புதூர் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் பாசன வசதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உறுதியளித்தார்.

அதேபோல், தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கு வழங்கப்படும் மேம்பாட்டு நிதியை தொகுதியின் தேவை அறிந்து வளர்ச்சிக்காக செயலாற்றிடுவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் 18 சட்டமன்றத் தொதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன்

இந்நிலையில், ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தி ஆண்டிபட்டிக்கு தெற்கே உள்ள 152 கிராமங்களை பயனைடைய செய்வேன். ஆண்டிபட்டி தாலுகா நெசவாளர்களின் துயர் துடைக்க உயர் தர நெசவு ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உழவு, நெசவு மேம்பட பாடுபடுவேன் என தேர்தல் வாக்குறுதியளித்தார்.

தொகுதியின் வளர்ச்சிக்காக வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் லட்சுமிபுரம், புதூர் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் பாசன வசதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உறுதியளித்தார்.

அதேபோல், தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கு வழங்கப்படும் மேம்பாட்டு நிதியை தொகுதியின் தேவை அறிந்து வளர்ச்சிக்காக செயலாற்றிடுவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Intro: ஆண்டிபட்டி பகுதி வறட்சியை போக்க முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்திடுவோம், என ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்குறுதி.


Body: தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவற்றில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் (தனி) ஆகிய இரு சட்ட மன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபேற உள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் ஆ.மகாராஜனிடம் நாம் நடத்திய சிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது,
ஆண்டிபட்டி தொகுதியின் முன்னுரிமை திட்டமாக, வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்து, புள்ளிமான்கோம்பை கிராமம் வரை கொண்டு செலுத்தப்படும். வைகையில் திறக்கப்படும் தண்ணீரை கால்வாய் வழியாக கொண்டு செலுத்தாமல் ஆற்றின் வழியாகவே திறக்கப்படும் என்றார்.
மேலும் முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தி ஆண்டிபட்டிக்கு தெற்கே உள்ள 152கிராமங்களை பயனைடைய செய்வேன். ஆண்டிபட்டி தாலுகா நெசவாளர்களின் துயர் துடைக்க உயர் தர நெசவு ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உழவு, நெசவு மேம்பட பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.
தொகுதியின் வளர்ச்சிக்காக வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் லட்சுமிபுரம், புதூர் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் பாசன வசதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பதிலளித்த அவர், வெயிலை விட மோசமாக சூடு பிடிக்கும் ஆட்சி தான் தற்போது நடைபெறுகிறது. நூறு நாள் வேலைத்திட்டம், முதியோர் பென்சன் ரத்து, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவைகளால் சாமான்ய மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அணைவரின் வங்கி கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்று மோடி அளித்த போலி வாக்குறுதியைப் போல் இல்லாமல், ராகுல் காந்தி, ஸ்டாலின் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி தருவார்கள். எனவே இது போன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தான் வாக்கு கேட்போம் என்றார்.
மேலும் தான் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கு வழங்கப்படும் மேம்பாட்டு நிதியை தொகுதியின் முக்கிய தேவை அறிந்து வளர்ச்சிக்காக செயலாற்றிடுவேன் என்று உறுதி அளித்தார்.



Conclusion: பேட்டி : ஆ.மகாராஜன் ( ஆண்டிபட்டி சட்ட மன்ற இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.