ETV Bharat / state

தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 2000 தென்னை மரங்கள் சேதம்; விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Apr 23, 2023, 8:41 AM IST

தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் 2000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சரிந்து சேதமடைந்துள்ளது. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

theni
2000 தென்னை சேதம்
சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 2000 தென்னை சேதம்: விவசாயிகள் வேதனை!

தேனி: பூதிப்புரம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்து தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பல வருடங்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து, ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏப்.22-ஆம் தேதி திடீரென மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழையின் தாக்கத்தால், பூதிப்புரம் கிராமத்தில் வளர்க்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களும் சரிந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு அதிகளவு நட்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக தென்னை மரங்களைப் பராமரித்து வளர்த்து வந்த விவசாயிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள் வேரோடு சரிந்தது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயி கூறுகையில், “எங்கள் பிள்ளைகள் போல் பராமரித்து வளர்த்து வந்த மரங்கள் சரிந்து விழுந்தது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சூறாவளி காற்றினால் இந்த பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சரிந்து விழுந்து உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் சேதம் அடைந்த மரங்களை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால், அரசு சேதம் அடைந்த மரங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்!

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 2000 தென்னை சேதம்: விவசாயிகள் வேதனை!

தேனி: பூதிப்புரம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்து தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பல வருடங்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து, ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏப்.22-ஆம் தேதி திடீரென மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழையின் தாக்கத்தால், பூதிப்புரம் கிராமத்தில் வளர்க்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களும் சரிந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு அதிகளவு நட்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக தென்னை மரங்களைப் பராமரித்து வளர்த்து வந்த விவசாயிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள் வேரோடு சரிந்தது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயி கூறுகையில், “எங்கள் பிள்ளைகள் போல் பராமரித்து வளர்த்து வந்த மரங்கள் சரிந்து விழுந்தது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சூறாவளி காற்றினால் இந்த பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சரிந்து விழுந்து உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் சேதம் அடைந்த மரங்களை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால், அரசு சேதம் அடைந்த மரங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.