ETV Bharat / state

முதுமலையில் வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம்! - முதுமலையில் வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

Wildlife survey work begins at Mudumalai forest
author img

By

Published : Nov 23, 2019, 12:47 PM IST


நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியானது உள்மண்டலம், வெளிமண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்னும், பின்னும் வனஉயிரின கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வெளிமண்டல வனப்பகுதியில் இன்று காலை முதல் வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. சுமார் 367 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வெளிமண்டல வனப்பகுதியானது மொத்தம் 35 நேர்கோடுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு நேர்கோட்டிற்கு நான்கு பேர் வீதம் சுமார் 150 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுமலையில் பருவமழைக்கு பிந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி துவக்கம்

இந்த கணக்கெடுப்பில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட மற்ற வனவிலங்குகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள தாவரங்களின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. வனவிலங்குகளின் நேரடி பார்வை, எச்சம், கால்தடம் உள்ளிட்டைவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிகள் நடந்து வருகிறது.

இதையும் படிங்க:

இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை - திருமாவளவன்


நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியானது உள்மண்டலம், வெளிமண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்னும், பின்னும் வனஉயிரின கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வெளிமண்டல வனப்பகுதியில் இன்று காலை முதல் வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. சுமார் 367 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வெளிமண்டல வனப்பகுதியானது மொத்தம் 35 நேர்கோடுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு நேர்கோட்டிற்கு நான்கு பேர் வீதம் சுமார் 150 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுமலையில் பருவமழைக்கு பிந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி துவக்கம்

இந்த கணக்கெடுப்பில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட மற்ற வனவிலங்குகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள தாவரங்களின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. வனவிலங்குகளின் நேரடி பார்வை, எச்சம், கால்தடம் உள்ளிட்டைவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிகள் நடந்து வருகிறது.

இதையும் படிங்க:

இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை - திருமாவளவன்

Intro:OotyBody:உதகை 23-11-19

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை துவங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கணக்கெடுப்பில் சுமார் 150 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
--------

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்மண்டலம் மற்றும் வெளி மண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன், பின் என இரண்டு முறை வனஉயிரின கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வெளிமண்டல வனப்பகுதியில் இன்று காலை முதல் வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. 367 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வெளிமண்டல வனப்பகுதி மொத்தம் 35 நேர்கோடுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு நேர்கோட்டிற்கு 4 பேர் வீதம் சுமார் 150 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பில் புலி மற்றும் அவற்றிற்கு உணவாகும் விலங்குகள், சிறுத்தை, யானை உள்ளிட்ட மற்ற வனவிலங்குகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. அத்தோடு வனப்பகுதியில் உள்ள தாவரங்களின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. வனவிலங்குகளின் நேரடி பார்வை, எச்சம், கால்தடம் உள்ளிட்டைவைகளை அடிப்படையாக கொண்டு இந்த பணிகள் நடந்து வருகிறது.Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.