ETV Bharat / state

விபத்தில் சிக்கி உயிரிழந்த மரநாய்!

நீலகிரி: குன்னூரில் வாகனம் மோதியதில் அரியவகை மரநாய் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

author img

By

Published : Aug 22, 2019, 4:12 AM IST

மரநாய்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனத்தில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கமானது. இந்நிலையில், சிம்ஸ் பார்க் பகுதியில் அழிந்து வரும் பட்டியலிலுள்ள மரநாய் ஒன்று சாலையை கடக்கும் போது வாகனம் மோதி நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மரநாய்
விபத்தில் சிக்கி உயிரிழந்த மரநாய்

இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மரநாயின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனத்தில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கமானது. இந்நிலையில், சிம்ஸ் பார்க் பகுதியில் அழிந்து வரும் பட்டியலிலுள்ள மரநாய் ஒன்று சாலையை கடக்கும் போது வாகனம் மோதி நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மரநாய்
விபத்தில் சிக்கி உயிரிழந்த மரநாய்

இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மரநாயின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:குன்னூரில் வாகனம் மோதி அரியவகை மரநாய் பரிதாபமாக இறந்தது.Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி வனங்களையொட்டியுள்ள நகரமாகும். இங்குள்ள வனத்தில் யானை, காட்டெருமை, காட்டு பன்றி, மரஅணில் போன்றவைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் தற்போது உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிடுப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. இதன் காரணமாக சாலையை கடக்கும் பொழுது வாகனம் மோதி அறிய வகை வன விலங்குகள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. சிம்ஸ் பார்க் பகுதியில் அழிந்து வரும் பட்டியலிலுள்ள மரநாய் சாலையை கடக்கும் பொழுது வாகனம் மோதி நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் மரநாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரநாயின் மீது மோதி நிர்க்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.