ETV Bharat / state

நீலகிரி அருகே பசுவை வதம் செய்த புலி! கிராம மக்கள் கிலி

author img

By

Published : Aug 23, 2019, 9:49 AM IST

நீலகிரி: காந்திபுரம் கிராமத்தில் புலி ஒன்று பசுவைத் தாக்கி கொன்றதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசுவை வேட்டையாடிய புலி! பதற்றத்தில் கிராம மக்கள்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே புலியின் நடமாட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்து புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது புலி ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளது. மேலும் காந்திபுரம் கிராமத்தின் மின்மாற்றி அருகே பசு ஒன்றை புலி அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காந்திபுரம், முள்ளிமலை, கெச்சகட்டி, கெரப்பாடு, தொட்டக் கம்பை உள்ளிட்ட கிராம மக்கள் பீதியில் உறைந்துபோய் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே புலியின் நடமாட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்து புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது புலி ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளது. மேலும் காந்திபுரம் கிராமத்தின் மின்மாற்றி அருகே பசு ஒன்றை புலி அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காந்திபுரம், முள்ளிமலை, கெச்சகட்டி, கெரப்பாடு, தொட்டக் கம்பை உள்ளிட்ட கிராம மக்கள் பீதியில் உறைந்துபோய் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

Intro:OotyBody:நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் மாட்டை அடித்து கொன்ற புலியால் பரபரப்பு ......

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது இந்நிலையில் மாவட்டத்தில் உயிர் பலி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனிடையே மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே புலி ஒன்று நடமாடி வந்த வண்ணம் உள்ளது, இதனை அப்பகுதி மக்கள் நேரடியாகவே பார்த்த நிலையில்இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனால் வனத்துறை இதனை பொருட்படுத்த தாத நிலையில் இருந்த தற்சமயம் புலி ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஆடு மாடுகளை கொன்று சாப்பிட துவங்கியுள்ளது .இதனை தொடர்ந்து காந்தி புரம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே மாட்டை புலி அடித்து கொன்றுள்ளது , இதனால் காந்திபுரம், முள்ளிமலை, கெச்சகட்டி, கெரப்பாடு, தொட்டக் கம்பை கிராம மக்கள் பீதியில் உறைந்து போய் வெளியில் நடமாடவே அச்சத்துக்குள்ளாகியுள் ளனர் .Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.