ETV Bharat / state

புதிய உறவை தேடி வண்டலூர் செல்லும் புலிக்குட்டிகள்!

author img

By

Published : Nov 23, 2020, 12:39 PM IST

நீலகிரி: தாயை இழந்த இரண்டு புலிக்குட்டிகளை நீலகிரியை அடுத்த சிங்காரா வனப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர், பராமரிப்புக்காக வண்டலூர் கொண்டுச்சென்றனர்.

புலிக்குட்டிகளை உயிருடன் மீட்ட வனத்துறையினர்
புலிக்குட்டிகளை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட சிங்காரா வனப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்த பெண் புலி அருகே 2 புலி குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

பிறந்து 20 நாள்களே ஆன இந்த இரண்டு ஆண் புலி குட்டிகள் பராமரிப்புகாக இன்று (நவ.23) அதிகாலை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இரண்டு வன கால்நடை மருத்துவ குழுவுடன் புலி குட்டிகள் வண்டலூர் கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது வரை இந்தப் புலி குட்டிகள் நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணைப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட சிங்காரா வனப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்த பெண் புலி அருகே 2 புலி குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

பிறந்து 20 நாள்களே ஆன இந்த இரண்டு ஆண் புலி குட்டிகள் பராமரிப்புகாக இன்று (நவ.23) அதிகாலை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இரண்டு வன கால்நடை மருத்துவ குழுவுடன் புலி குட்டிகள் வண்டலூர் கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது வரை இந்தப் புலி குட்டிகள் நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணைப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.