ETV Bharat / state

குளிக்கச்சென்ற இருவர் மாயம்: உடல்களைத் தேடும் பணிகள் தீவிரம் - searching the bodies of people who bathe in the Kallatti water fall

நீலகிரி: கல்லட்டி நீர் வீழ்ச்சியில் மாயாமான இரண்டு இளைஞர்களின் உடல்களைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற நபர்களின் உடல்களை தேடும் பணி
கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற நபர்களின் உடல்களை தேடும் பணி
author img

By

Published : Jan 28, 2020, 8:14 AM IST

உதகையைச் சார்ந்த சுந்தர மூர்த்தி, கணேசன், சாமுவேல், ஜிப்சன் ஆகியோர் தங்களது நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார், பரத் ஆகியோருடன் கடந்த 26ஆம் தேதி மதியம் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களுள் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் நீழ்வீழ்ச்சியினுள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.

அதனைக் கண்ட சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாயமான சாமுவேல், கணேசனின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.

கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற நபர்களின் உடல்களைத் தேடும் பணி

இதனையடுத்து தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலைக் கண்டுபிடிக்க மாநில மீட்புக் குழு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

உதகையைச் சார்ந்த சுந்தர மூர்த்தி, கணேசன், சாமுவேல், ஜிப்சன் ஆகியோர் தங்களது நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார், பரத் ஆகியோருடன் கடந்த 26ஆம் தேதி மதியம் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களுள் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் நீழ்வீழ்ச்சியினுள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.

அதனைக் கண்ட சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாயமான சாமுவேல், கணேசனின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.

கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற நபர்களின் உடல்களைத் தேடும் பணி

இதனையடுத்து தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலைக் கண்டுபிடிக்க மாநில மீட்புக் குழு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

Intro:OotyBody:உதகை
27-1-20
உதகை அருகே கல்லட்டி நீர் வீழ்ச்சி யில் மாயாமான 2 இளைஞர்களின் உடல்களை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உதகையை சார்ந்த சுந்தர மூர்த்தி, கணேசன், சாமுவேல், ஜிப்சன் ஆகியோர் நண்பர்களான திருப்பூரை சார்ந்த விஜயகுமார், பரத் ஆகியோருடன் நேற்று மதியம் உதகை அருகே உள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சியை காண சென்றுள்ளனர். அதில் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவர் நீழ்வீச்சியினுள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். அதனை கண்ட சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மாயமான சாமுவேல் மற்றும் கணேசனின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இரண்டாவது நாளாக உடல்களை மீட்கும் பணி இன்று காலை முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை கண்டுபிடிக்க மாநில மீட்பு குழு இன்று இரவு வரவுள்ளது. சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்களும் குவிந்துள்ளதால் பாதுகாப்புக்காக போலிசார் குவிக்கபட்டுள்ளனர்.
பேட்டி : முத்து - பொதுமக்கள்Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.