நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் மலை ரயில் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும். ரன்னிமேடு ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ரன்னிமேடு ரயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையையடுத்து தற்போது இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு மின்விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் மின்விளக்குகளின் வெளிச்சம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தில் கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். தற்போது கழிப்பிட வசதி உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
மேலும் பூங்காவில் புல் மைதானத்தை சீர்செய்வதுடன் மலர் செடிகளை நடவுசெய்ய சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அஞ்சல் தலை கண்காட்சி!