ETV Bharat / state

உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம் - மலர்த்தொட்டிகள் அடுக்கும் பணி தொடக்கம் - உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம்

நீலகிரி: உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் அடுக்கும் பணி தொடங்கியது.

உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம்
author img

By

Published : Sep 18, 2019, 1:16 PM IST

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதிவரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்தச் சீசனில் உதகையை காண சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம்

குறிப்பாக பூங்காவில் உள்ள 15 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பிக்கொனியா, மேரிகோல்டு, டேலியா, டெய்சி, காலண்டுள்ளா, ஆஸ்டர், ஆர்கிட், டையானதஸ், பால்சம், ஜெரேனியம் உள்ளிட்ட 85 வகையான மலர்ச்செடிகள் அடுக்கும் பணி இன்று தொடங்கியது.

இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர வேண்டும் எனவும் நெகிழிப் பொருட்களை எடுத்துவரக் கூடாது என்றும் வேண்டுகோள்விடுத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதிவரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்தச் சீசனில் உதகையை காண சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம்

குறிப்பாக பூங்காவில் உள்ள 15 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பிக்கொனியா, மேரிகோல்டு, டேலியா, டெய்சி, காலண்டுள்ளா, ஆஸ்டர், ஆர்கிட், டையானதஸ், பால்சம், ஜெரேனியம் உள்ளிட்ட 85 வகையான மலர்ச்செடிகள் அடுக்கும் பணி இன்று தொடங்கியது.

இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர வேண்டும் எனவும் நெகிழிப் பொருட்களை எடுத்துவரக் கூடாது என்றும் வேண்டுகோள்விடுத்தார்.

Intro:OotyBody:


உதகை 18-09-19

உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள்; அடுக்கும் பணி தொடங்கியது…. மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்த சீசனில் உதகையை காண சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்லும் நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா யபணிகள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது. குறிப்பாக பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பிக்கொனியா, மேரிகோல்டு, டேலியா, டெய்சி, காலண்டுள்ளா, ஆஸ்டர், ஆர்கிட், டையானதஸ், பால்சம், ஜெரேனியம் உள்பட 85 வகையான மலர் செடிகளை அடுக்கும் பணி இன்று துவங்கியது.
மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இன்று மாலைக்குள் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி நிறைவடையும். அதனையடுத்து நாளை காலை முதல் ஒரு மாத காலத்திற்கு மலர் அலங்காரங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள். அது மட்டுமின்றி பூங்காவின் மற்ற பகுதிகளில் நடவு செய்யபட்டுள்ள 2.5 லட்சம் மலர் செடிகளில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, வெள்ளை என பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கவும் ஏற்பாடகள் செய்யபட்டுள்ளது. இதனிடையே மழை இல்லாமல் இதமான காலநிலை நிலவுவதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர வேண்டும் எனவும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர கூடாது எனவும் மாவட்ட ஆட்சிதலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பேட்டி: இன்னசென்ட் திவ்யா – நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.