ETV Bharat / state

ஓவர் சேட்டையுடன் டிமிக்கி கொடுக்கும் சங்கர்... தீவிரமாக தேடும் வனத்துறை.. - யானை தப்பியோட்டம்

நீலகிரி: மூன்று பேரை கொன்ற ஆட்கொல்லி யானையான சங்கரை பிடிக்க மயக்க ஊசி செலத்திய நிலையில் யானை சாதுர்யமாக வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிச் சென்றது.

ooty_sankar_elephant
ooty_sankar_elephant
author img

By

Published : Feb 10, 2021, 6:15 PM IST

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மதம் பிடித்த நிலையில் சுற்றித்திரிந்த யானை, தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் எனப் பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அந்த யானை தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து கேரளாவுக்கு சென்றதால், யானையை பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் ஆட்கொல்லி யானையான சங்கர் கேரளாவில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகளை இடித்து நாசம் செய்து மீண்டும் ஏழு நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சங்கரை பிடிக்க முதுமலையிலிருந்து விஜய், சுஜய், பொம்மன், முதுமலை ஆகிய நான்கு கும்கி யானைகளும் பொள்ளாச்சி டாப்சிலிப்பிலிருந்து கலீம் என்ற கும்கி யானையும் வரவழைக்கபட்டுள்ளன.

ஓவர் சேட்டையுடன் டிமிக்கி கொடுக்கும் சங்கர்

இது மட்டுமல்லாது முப்பதுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தற்போது யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆட்கொல்லி யானை கண்டறிந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இரண்டு முறை மயக்க ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலையில் ஒரு முறை மட்டுமே மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் யானை மீண்டும் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்து காட்டு பகுதிக்குள் சென்றது.

இதையும் படிங்க:

புகாரை படிக்க தெரியாத ஸ்டாலின், குறைகளை எப்படி தீர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மதம் பிடித்த நிலையில் சுற்றித்திரிந்த யானை, தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் எனப் பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அந்த யானை தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து கேரளாவுக்கு சென்றதால், யானையை பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் ஆட்கொல்லி யானையான சங்கர் கேரளாவில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகளை இடித்து நாசம் செய்து மீண்டும் ஏழு நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சங்கரை பிடிக்க முதுமலையிலிருந்து விஜய், சுஜய், பொம்மன், முதுமலை ஆகிய நான்கு கும்கி யானைகளும் பொள்ளாச்சி டாப்சிலிப்பிலிருந்து கலீம் என்ற கும்கி யானையும் வரவழைக்கபட்டுள்ளன.

ஓவர் சேட்டையுடன் டிமிக்கி கொடுக்கும் சங்கர்

இது மட்டுமல்லாது முப்பதுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தற்போது யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆட்கொல்லி யானை கண்டறிந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இரண்டு முறை மயக்க ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலையில் ஒரு முறை மட்டுமே மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் யானை மீண்டும் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்து காட்டு பகுதிக்குள் சென்றது.

இதையும் படிங்க:

புகாரை படிக்க தெரியாத ஸ்டாலின், குறைகளை எப்படி தீர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.