ETV Bharat / state

காமராஜ் சாகர் அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் - பொதுமக்கள் அவதி - உதகை

நீலகிரி: உதகையில் உள்ள காமராஜ் சாகர் அணையில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

plastic wastage
author img

By

Published : Aug 23, 2019, 5:09 PM IST

Updated : Aug 23, 2019, 8:28 PM IST

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இயற்கை அழகு, பசுமையான காடுகள், நீலவண்ணங்களில் காட்சியளிக்கும் அடுக்கடுக்கான அணைகள் ஆகியவை உள்ளன. இங்கு 2865 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் ஏராளமான உயிரினங்களும், தாவர வகைகளும் உள்ளன.

இந்த வனப்பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த 2002ஆம் ஆண்டு பிளாஸ்டிக்கை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தடை அமலில் இருந்தாலும், பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

kamarajar sagar dam plastic wastage storage  ooty nilagiri disatrict  காமராஜர் சாகர் அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்  உதகை
கரையோரத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை சாலை ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசுகின்றனர். இதனால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில், காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காமராஜ் சாகர் அணை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், அணையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட பல டன் பிளாஸ்டிக் கழிவுகளும் அணையில் தேங்கியுள்ளன.

kamarajar sagar dam plastic wastage storage  ooty nilagiri disatrict  காமராஜர் சாகர் அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்  உதகை
அணையில் பரவியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

அணையில் தேங்கி கிடக்கும் பல டன் பிளாஸ்ட்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் மிகவும் மோசமாக காட்சி அளிப்பதுடன். துர்நாற்றமும் வீசுகிறது.

காமராஜ் சாகர் அணை

இதனால் அந்த அணையை ஒட்டி உள்ள ஆதிவாசி மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதால் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை தற்போது அமல்படுத்த நீலகிரி மாவட்டம் ஒரு முன் மாதிரியாக இருந்தாலும், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது என பொதுமக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இயற்கை அழகு, பசுமையான காடுகள், நீலவண்ணங்களில் காட்சியளிக்கும் அடுக்கடுக்கான அணைகள் ஆகியவை உள்ளன. இங்கு 2865 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் ஏராளமான உயிரினங்களும், தாவர வகைகளும் உள்ளன.

இந்த வனப்பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த 2002ஆம் ஆண்டு பிளாஸ்டிக்கை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தடை அமலில் இருந்தாலும், பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

kamarajar sagar dam plastic wastage storage  ooty nilagiri disatrict  காமராஜர் சாகர் அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்  உதகை
கரையோரத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை சாலை ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசுகின்றனர். இதனால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில், காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காமராஜ் சாகர் அணை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், அணையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட பல டன் பிளாஸ்டிக் கழிவுகளும் அணையில் தேங்கியுள்ளன.

kamarajar sagar dam plastic wastage storage  ooty nilagiri disatrict  காமராஜர் சாகர் அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்  உதகை
அணையில் பரவியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

அணையில் தேங்கி கிடக்கும் பல டன் பிளாஸ்ட்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் மிகவும் மோசமாக காட்சி அளிப்பதுடன். துர்நாற்றமும் வீசுகிறது.

காமராஜ் சாகர் அணை

இதனால் அந்த அணையை ஒட்டி உள்ள ஆதிவாசி மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதால் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை தற்போது அமல்படுத்த நீலகிரி மாவட்டம் ஒரு முன் மாதிரியாக இருந்தாலும், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது என பொதுமக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.

Intro:OotyBody:
படப்பிடிப்பு எடுத்த இடம். குப்பை கழிவுகளாக காட்சியளிக்கிறது.

முள்ளும் மலரும், வாழ்வே மாயம், பாண்டியன், சிவா, தீனா, நினைத்தேன் வந்தாய் என தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 500ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுத்த இடம் இப்போது குப்பை கழிவுகளாக காட்சி தருகிறது.

பார்போரை தன்பக்கம் ஈர்க்கும் இயற்கை அழகுகள், பார்ப்போரை பரவசமூட்டும் பசுமையான காடுகள், நீலவண்ணங்களில் காட்சியளிக்கும் அடுக்கடுக்கான அணைகள் என உள்ளது தான் நீலகிரி மாவட்டம். 2865 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் உள்ள வனபகுதியில் ஏராமான உயிரினங்களும், தாவர வகைகளும் உள்ளன. பாதுகாக்கபட வேண்டிய இந்த வனப்பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்க கூடாது என்பதற்காக கடந்த 2002-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் தடை என்ற திட்டத்தை அமல்படுத்தியது. தொடக்க காலத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் இருந்தாலும் நாட்கள் ஆக ஆக பிளாஸ்டிக் புழக்கம் என்பது அதிகரித்தது. இதனால் சுற்றுசுழல் பாதிக்கபடும் நிலை ஏற்பட்டது.
இதில் மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலை ஓரங்களிலும், வனபகுதிகளிலும் வீசபட்டன. இதனால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கபட்டதுடன் மண் வளமும் பாதிக்கபட்டு வருகிறது. குறிப்பாக உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டபட்டு பார்க்க மிகவும் அழகாக காட்சி அளித்து வந்த காமராஜர்சாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வீசபட்டு பிளாஸ்டிக் கழிவுகளால் அந்த அணையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது உதகையிலிருந்து வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட பல டன் பிளாஸ்டிக் கழிவுகளும் அணை தண்ணீரில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி உள்ளது.
முள்ளும் மலரும், வாழ்வே மாயம், பாண்டியன், சிவா, தீனா உள்பட ஏராளமான தமிழ் திரைபடங்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 500ற்கும் மேற்பட்ட திரைபடங்கள் இந்த அணை பகுதியில் எடுக்கபட்டது. தற்போதும் திரைபடங்களின் சூட்டிங் இந்த அணை பகுதியில் நடைபெறுகிறது. ஆனால் அணையில் தேங்கி உள்ள நீரிலும் கரையிலும் குவிந்து கிடக்கும் பல டன் பிளாஸடடிக் கழிவுகள், மதுபாட்டில்கள், பழைய துணிகள் என எந்த கழிவுகளும் அகற்றபடாமல் மிகவும் மோசமாக காட்சி அளிப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அந்த அணையை ஒட்டி உள்ள ஆதிவாசி மக்களும் பாதிக்கபட்டு உள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதால் தமிழக முழுவதும் பிளாஸ்டிக் தடை தற்போது அமல்படத்த நீலகிரி மாவட்டம் ஒரு முன் மாதிரியாக இருந்தாலும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இன்னமும் அகற்றபடாமல் உள்ளது.
பேட்டி : பவுல்ராஜ் - உதகை
அசோகன் - உதகை

Conclusion:Ooty
Last Updated : Aug 23, 2019, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.