ETV Bharat / state

உதகையில் கண்ணை கவரும் வண்ண மீன்கள் கண்காட்சி

author img

By

Published : May 2, 2019, 1:19 PM IST

நீலகிரி: கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வண்ண மீன்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன.

ooty-fish-exhibition

கோடை விடுமுறை ஆரம்பித்தாலே போதும், சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்களை காணவும் சுமார் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும்கூட வருகை தருகின்றனர்.

வண்ண மீன்கள் கண்காட்சி

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம், தனியார் மூலம் பல்வேறு கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்தாண்டு மலர் மற்றும் பழ கண்காட்சி மட்டுமே நடத்தப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்காக நாய் கண்காட்சி, பழங்கால கார் கண்காட்சி, வண்ண மீன்கள் கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன.

இதில் முதற்கட்டமாக உதகையில் வண்ண மீன்கள் கண்காட்சி தொடங்கியது. சுமார் 500-க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிரானா, ஜாய்ன்ட் கௌரமீ, ரெட் டிராகன் பிளாவரான், கிரேபிஷ் உள்ளிட்ட பல வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ள வரை மீன்களின் கண்காட்சி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை ஆரம்பித்தாலே போதும், சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்களை காணவும் சுமார் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும்கூட வருகை தருகின்றனர்.

வண்ண மீன்கள் கண்காட்சி

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம், தனியார் மூலம் பல்வேறு கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்தாண்டு மலர் மற்றும் பழ கண்காட்சி மட்டுமே நடத்தப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்காக நாய் கண்காட்சி, பழங்கால கார் கண்காட்சி, வண்ண மீன்கள் கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன.

இதில் முதற்கட்டமாக உதகையில் வண்ண மீன்கள் கண்காட்சி தொடங்கியது. சுமார் 500-க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிரானா, ஜாய்ன்ட் கௌரமீ, ரெட் டிராகன் பிளாவரான், கிரேபிஷ் உள்ளிட்ட பல வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ள வரை மீன்களின் கண்காட்சி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 உதகை                               02-05-19

உதகையில் தொடங்கிய வண்ண மீன்கள் கண்காட்சியில் 500ற்கும் மேற்பட்ட அரிய வகை மீன்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது.

 மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். அப்போது உதகையில் குளு, குளு காலநிலை காணபடும். அந்த இதமான காலநிலையை அனுபவித்து உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண சுமார் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணமாக உள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் மூலம் பல்வேறு கண்காட்சி நடத்தபடுவது வழக்கம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்தாண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் மற்றம் பழக்கண்காட்சி மட்டுமே நடத்தப்டுகிறது.இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்காக நாய் கண்காட்சி, பழங்கால கார் கண்காட்சி, வண்ண மீன்கள் கண்காட்சி போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக வண்ண மீன்கள் கண்காட்சி உதகையில் துவங்கியுள்ளது. 500-க்கும் அதிகமான வகைகள் கொண்ட மீன்களின் கண்காட்சி துவங்கபட்டுள்ளது. இதில் அரிய வகை மீன்கள் உள்ளன. குறிப்பாக பிரானா, ஜாய்ன்ட் கௌரமீ, ரெட் டிராகன் பிளாவரான், கிரேபிஷ், டிஸ்கஸ், சி ஏஞ்சல், புளு டேம்சல, பிளாக் கோஸ்ட் நைட் பிஷ் உள்பட பல வகைகள் கொண்ட வண்ண வண்ண மீன்களும் இதர வகையை சேர்ந்த மீன்களும் காட்சியில் இடம்பிடித்துள்ளன. பொதுவாக உதகை வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே சென்று வரும் நிலையில் தற்போது தொடங்கியுள்ள வண்ண மீன்களின் கண்காட்சி சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ள வரை மீன்களின் கண்காட்சி நடத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி : சைலேஷ் - மீன்கள் பராமரிப்பாளர் (உதகை)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.