ETV Bharat / state

பசுக்கள் திருடியவர்களை காட்டிக் கொடுத்த சிசிடிவி!

நீலகிரி: சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு உயர் ரக பசுக்கள் திருடியவர்களை காவல் துறையினர் சிசிடிவி பதிவு காட்சிகளின் உதவியால் கைது செய்தனர்.

author img

By

Published : Apr 24, 2019, 2:44 PM IST

Updated : Apr 24, 2019, 4:17 PM IST

சிசிடிவி பதிவு

ஏப்ரல் 17ஆம் தேதி ஊட்டி அருகே கேத்தி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 உயர் ரக ஜெர்சி பசுக்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி, சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

இது குறித்து மாடுகளின் உரிமையாளர் கேத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் பசுக்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார் சோதனைச் சாவடியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி பதிவுக் காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் நெகிழித் தார்ப்பாயால் மூடிய ஒரு சரக்கு வாகனம் செல்வதும், அந்த வாகனத்தை சோதனைச் சாவடி அலுவலர்கள் விசாரிக்கும்போது, தார்ப்பாய் உள்ளே இருந்த பசு ஒன்று தலையை வெளியே நீட்டியிருந்ததும் பதிவாகியுள்ளது.

பின்னர் சிசிடிவி பதிவு காட்சிகளைக் கொண்டு சரக்கு வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் தகவல்களைச் சேகரித்த காவல் துறையினர் உயர் ரக பசுக்களைத் திருடிய திருப்பூரைச் சேர்ந்த பார்த்திபன், சிவா ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரைத் தேடிவருகின்றனர்.

சிசிடிவி பதிவு காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த காவல் துறையினரை அனைத்து தரப்பு மக்கள் பாரட்டினர்.

சிசிடிவி பதிவு

ஏப்ரல் 17ஆம் தேதி ஊட்டி அருகே கேத்தி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 உயர் ரக ஜெர்சி பசுக்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி, சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

இது குறித்து மாடுகளின் உரிமையாளர் கேத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் பசுக்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார் சோதனைச் சாவடியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி பதிவுக் காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் நெகிழித் தார்ப்பாயால் மூடிய ஒரு சரக்கு வாகனம் செல்வதும், அந்த வாகனத்தை சோதனைச் சாவடி அலுவலர்கள் விசாரிக்கும்போது, தார்ப்பாய் உள்ளே இருந்த பசு ஒன்று தலையை வெளியே நீட்டியிருந்ததும் பதிவாகியுள்ளது.

பின்னர் சிசிடிவி பதிவு காட்சிகளைக் கொண்டு சரக்கு வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் தகவல்களைச் சேகரித்த காவல் துறையினர் உயர் ரக பசுக்களைத் திருடிய திருப்பூரைச் சேர்ந்த பார்த்திபன், சிவா ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரைத் தேடிவருகின்றனர்.

சிசிடிவி பதிவு காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த காவல் துறையினரை அனைத்து தரப்பு மக்கள் பாரட்டினர்.

சிசிடிவி பதிவு
உதகை
23-04-19
உதகை அருகே சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 உயர் ரக பசுமாடுகளை திருடி சென்ற சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து  திருப்பூரை சேர்ந்த 2 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

   உதகை அருகே கேத்தி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 உயர் ரக ஜெர்சி பசுமாடுகளை கடந்த 17-ந்தேதி மர்ம ஆசாமிகள் திருடி சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். இது குறித்து அந்த பசுமாடுகளின் உரிமையாளர் கேத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனையடுத்து அந்த பசுமாடுகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் கேத்தி போலிசார் ஈடுபட்டனர். அதற்காக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள  பர்லியார் சோதனை சாவடியில் பொறுத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் தார்பாளால் மூடிய ஒரு சரக்கு வாகனம் செல்வதும், அந்த வாகனத்திலிருந்துஒரு மர்ம  ஆசாமி காவல் துறை சோதனை சாவடியிக்கு சென்ற காட்சியும் அப்போது ஒரு  மாடு மூடபட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாலை தலையால் விலக்கி விட்டி தனது தலையை வெளியில் காட்டிய காட்சியும் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சரக்கு வாகனத்தின் பதிவு எண் மூலம் ம் தகவல்களை சேகரித்த போலிசார் நேற்று பொள்ளாச்சி பகுதியில் அந்த இரண்டு மாடுகளை மீட்டனர். மேலும் கடத்தல் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த பார்த்திபன், சிவா ஆகிய 2 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான ஒருவனை தேடி வருகின்றனர். திருடிய பசுமாடுகள் வெளியில் தெரியாமல் இருக்க பிளாஸ்டி தார்பால் மூடியதும் சோதனை சாவடியில் வாகனம்  நிறுத்திய போது பசுமாடு தன்னை கடத்தி செல்கிறார்கள் காப்பாற்றுங்கள் என்பது போல தக்க சமயத்தில் தலையை வெளியில்  தூக்கிய காண்பித்த காட்சியும் பார்ப்போரை வியப்படைய செய்துள்ளது. தக்க சமயத்தில் பசுமாடு பிளாஸ்டிக் தார்பாலுக்கு  வெளியே தலையை தூக்காமல் இருந்திருந்தால் பசுமாடுகளை யார் திருடி சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும்....
Last Updated : Apr 24, 2019, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.