இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள 2 பேர் நலமுடன் உள்ளதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள்.
நோய் தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதி மே ஏழாம் தேதிவரை சீல் வைத்து கண்காணிக்கப்படும். இனி வரும் நாள்களில் சனி, ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படும்.
கரோனா தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. 1471 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வந்தனர். அவர்களுக்கான 28 நாள்கள் கண்காணிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது யாரும் வீட்டு கண்காணிப்பில் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!