ETV Bharat / state

நீலகிரி தங்கத்தின் விலை மந்தம்: மாற்றுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகள்!

author img

By

Published : Jul 6, 2020, 3:14 PM IST

நீலகிரி: கரோனா பரவலால் கேரட் விலை வீழ்ச்சியடைந்ததால், குன்னூர் பகுதி விவசாயிகள் அனைவரும் மாற்று பயிர்களை பயிரிட்டு லாபம் ஈட்டுகின்றனர்.

nilgiri
nilgiri

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக நீலகிரியின் தங்கம் என விவசாயிகளால் அழைக்கப்படும் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது நிலவிவரும் கரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால், கேரட் தேக்கமடைந்து அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்று பயிர்களான டர்னீப், முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும், மார்க்கெட் பகுதியில் இதற்கு நல்ல விலை கிடைப்பதால், அவற்றை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ’மீண்டும் தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக மாறும் தரங்கம்பாடி’ - சூளுரைக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக நீலகிரியின் தங்கம் என விவசாயிகளால் அழைக்கப்படும் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது நிலவிவரும் கரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால், கேரட் தேக்கமடைந்து அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்று பயிர்களான டர்னீப், முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும், மார்க்கெட் பகுதியில் இதற்கு நல்ல விலை கிடைப்பதால், அவற்றை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ’மீண்டும் தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக மாறும் தரங்கம்பாடி’ - சூளுரைக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.