ETV Bharat / state

ஊட்டியில் சாலை வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு.! - Villagers request the government to build a road

ஊட்டி: ஊட்டி அருகே கிராமமக்கள் சாலை வசதியின்றி தவித்து வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

Near Ooty Villagers request the government to build a road
Near Ooty Villagers request the government to build a road
author img

By

Published : Dec 12, 2019, 12:57 PM IST

ஊட்டி அருகே கூடலூரை அடுத்துள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மூச்சுக்குன்று வடக்கு கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் உள்ளிட்ட இதர மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரும் இம்மக்கள் சாலை வசதி இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். இந்தபகுதி தற்போது வனத்துறை வசம் உள்ளது. இதனை அடர்ந்த வனப் பகுதியாக அங்கீகரித்து அவர்கள் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய தடை விதித்துள்ளனர்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலமுறை சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மக்கள் நடந்து சென்ற ஒத்தையடி பாதையும் முற்றிலும் சேதமானது. அந்த சாலையும் சரி செய்ய வனத்துறையினர் தடை செய்துள்ளனர்.

இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவர் பாம்பு கடித்த நிலையில் அவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் உயிரிழந்தார்.

சாலை வசதிகள் இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளியை தூக்கிச் செல்லும் கிராம மக்கள்
இதேபோல் நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட வெளுக்கன் என்ற 65 வயது பழங்குடியின முதியவரை உறவினர்கள் தொட்டில் கட்டி தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சரியான சாலை வசதி இல்லாதது அப்பகுதி மக்களுக்கு பெருத்த வேதனையை கொடுத்துள்ளது. அக்கிராம மக்களின் கோரிக்கை ஒன்றுதான். சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு சாலை வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே.!

இதையும் படிங்க: சாலையின் குறுக்கே மண், ஜல்லி - நோயாளிகளை தூக்கிச் செல்லும் அவலம்!

ஊட்டி அருகே கூடலூரை அடுத்துள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மூச்சுக்குன்று வடக்கு கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் உள்ளிட்ட இதர மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரும் இம்மக்கள் சாலை வசதி இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். இந்தபகுதி தற்போது வனத்துறை வசம் உள்ளது. இதனை அடர்ந்த வனப் பகுதியாக அங்கீகரித்து அவர்கள் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய தடை விதித்துள்ளனர்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலமுறை சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மக்கள் நடந்து சென்ற ஒத்தையடி பாதையும் முற்றிலும் சேதமானது. அந்த சாலையும் சரி செய்ய வனத்துறையினர் தடை செய்துள்ளனர்.

இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவர் பாம்பு கடித்த நிலையில் அவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் உயிரிழந்தார்.

சாலை வசதிகள் இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளியை தூக்கிச் செல்லும் கிராம மக்கள்
இதேபோல் நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட வெளுக்கன் என்ற 65 வயது பழங்குடியின முதியவரை உறவினர்கள் தொட்டில் கட்டி தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சரியான சாலை வசதி இல்லாதது அப்பகுதி மக்களுக்கு பெருத்த வேதனையை கொடுத்துள்ளது. அக்கிராம மக்களின் கோரிக்கை ஒன்றுதான். சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு சாலை வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே.!

இதையும் படிங்க: சாலையின் குறுக்கே மண், ஜல்லி - நோயாளிகளை தூக்கிச் செல்லும் அவலம்!

Intro:OotyBody: உதகை 12-12-19

சாலை இன்றி தவித்து வரும் கிராம மக்கள் . நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம். சாலை இல்லாததால் கடந்த ஐந்து வருடங்களில் பல பேர் இறந்ததாக பொதுமக்கள் தகவல் .

கூடலூரை அடுத்துள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது மூச்சுக்குன்று வடக்கு கிராமம். பழங்குடியினர்கள் மற்றும் இதர இன மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கள் சாலை இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரிவு 17 நிலம் என்று இருந்த நிலையில் தற்போது அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதியாக மாற்றி சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய தடை விதித்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலமுறை சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மக்கள் நடந்து சென்ற ஒத்தையடி பாதையும் முற்றிலும் சேதமானது. அந்த சாலையும் சரி செய்ய வனத்துறையினர் தடை செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவர் பாம்பு கடித்த நிலையில் அவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து ஒரு கர்ப்பிணிப்பெண் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு முதியவர் உட்பட பலரும் சாலை இல்லாததால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால் இறந்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளுக்கன் என்ற 65 வயது பழங்குடியின முதியவர் ரத்தக் கொதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள இளைஞர்கள் தொட்டில் கட்டி அவரை மூன்று கிலோமீட்டர் கரடுமுரடான ஒத்தையடி பாதையில் நடந்து சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்த எங்களுக்கு தற்போது வனத்துறையினரின் இதுபோன்ற தடை தங்களின் அடிப்படை தேவைகள் கூட செய்ய முடியாத அளவிற்கு உள்ளதாகவும் எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக தங்களுக்கு சாலை அமைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.