ETV Bharat / state

உதகையில் நகராட்சி சந்தையை திறக்கக் கோரி வியாபாரிகள் போராட்டம்!

author img

By

Published : Aug 11, 2020, 3:53 PM IST

நீலகிரி: உதகையில் நகராட்சி சந்தையை திறக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

வியாபாரிகள் போராட்டம்
வியாபாரிகள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் நகராட்சி சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகைக் கடை, பழக்கடை, டீ கடை, ஜவுளிக் கடை உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், உதகை, அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நகராட்சி சந்தையில் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக நகராட்சி சந்தை மூடப்பட்ட நிலையில், கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற சந்தையில் காய்கறி வியாபாரி மூலம் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியதால், ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது.

முஸ்தபா – வியாபாரிகள் சங்க தலைவர்

இதனிடையே, இன்று (11.08.20) வழங்கம் போல் சந்தை திறக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நகராட்சி அலுவலர்கள் சந்தையை திறக்க அனுமதிக்கவில்லை. இனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், நாளையும் (ஆகஸ்ட் 12) நகராட்சி சந்தையை திறக்க அலுவலர்கள் அனுமதிக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைப்பாதை சாலையில் பிளவு - போக்குவரத்துக்கு தடை

நீலகிரி மாவட்டம் உதகையில் நகராட்சி சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகைக் கடை, பழக்கடை, டீ கடை, ஜவுளிக் கடை உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், உதகை, அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நகராட்சி சந்தையில் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக நகராட்சி சந்தை மூடப்பட்ட நிலையில், கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற சந்தையில் காய்கறி வியாபாரி மூலம் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியதால், ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது.

முஸ்தபா – வியாபாரிகள் சங்க தலைவர்

இதனிடையே, இன்று (11.08.20) வழங்கம் போல் சந்தை திறக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நகராட்சி அலுவலர்கள் சந்தையை திறக்க அனுமதிக்கவில்லை. இனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், நாளையும் (ஆகஸ்ட் 12) நகராட்சி சந்தையை திறக்க அலுவலர்கள் அனுமதிக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைப்பாதை சாலையில் பிளவு - போக்குவரத்துக்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.