நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு கோயில்மேடு அருகே, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (22) தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கூடலூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ராதாகிருஷ்னன் என்பவர் ஓட்டிவந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு